Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...
டெல்லி அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது வரை எவ்வளவு கோடி ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது? என்ற தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்பட்டது முதல் தலைநகர் டெல்லியில், கிட்டத்தட்ட 7 ஆயிரம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தற்போது கூறியுள்ளது. டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியவர்களுக்கு தற்போது வரை ஒட்டுமொத்தமாக 13.50 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட 21 மாடல்களுக்கு இந்த மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அம்மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை டெல்லி மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி கொண்டுள்ளது.
ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி வைத்தார். இது 8 வாரங்களுக்கு நடைபெறக்கூடிய விழிப்புணர்வு திட்டமாகும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து டெல்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? என்பது போன்ற விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து, உமிழ்வு இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்களை மாற வைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவேன் மற்றும் வீட்டின் வளாகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பேன் என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும் என டெல்லி மக்களிடம் கேட்டு கொள்கிறேன். நான் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளேன். அனைவரும் எடுப்பார்கள் எனவும் நம்புகிறேன்'' என்றார்.
இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறையும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் தற்போது கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளும் காணப்படுகின்றன. ஆனால் வரும் காலங்களில் இந்த பிரச்னை வேகமாக தீர்க்கப்படும் என நம்பலாம். ஏனெனில் டெல்லி போன்ற மாநில அரசுகள் மட்டுமல்லாது, மத்திய அரசும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!