Just In
- 35 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனி அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஏமாந்துட்டாரோ! ரூ.43 லட்சம் விலையுள்ள காரை ரூ.7.8 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர்... ஏன் தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!
ரூ. 43 லட்சம் மதிப்புள்ள காரை தொழிலதிபர் ஒருவர் ரூ. 7.8 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.
ஃபோர்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ப்ரோன்கோ மாடலும் ஒன்று. இந்த காரையே செல்வந்தர் ஒருவர் இந்திய மதிப்பில் ரூ. 7.8 கோடி தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது முதல் தயாரிப்பு யூனிட் ஆகும். அதாவது, ப்ரோன்கோ உற்பத்தியில் ஃபோர்டு களமிறங்கிய பின்னர் தயாரிக்கப்பட்ட முதல் யூனிட் வாகனம். எனவேதான் இதனை இந்தளவு உயர்ந்த தொகையைக் கொடுத்து தொழிலதிபர் வாங்கியிருக்கின்றார். ஆகையால், அவர் ஏமாறவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
ஃபோர்டு ப்ரோன்கோ காரின் முதல் லாட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. முதல் லாட்டில் சுமார் 3,500 யூனிட் ப்ரோன்கா கார் மாடல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
இதனையடுத்து, இரண்டாவது லாட்டு ப்ரோன்கோ கார்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விஐஎன்001 என்ற சேஸிஸ் எண் கொண்ட ப்ரோன்கோ காரை ஃபோர்டு அரிசோனாவில் ஏலத்திற்கு விட்டது. இதனை சுமார் 1,075,000 அமெரிக்க டாலர்களுக்கு அரிசோனாவைச் சேர்ந்தவர் ஏலத்திற்கு எடுத்திருக்கின்றார்.
ஆகையால், மிக அதிக விலையில் விற்பனைக்கு வாங்கப்பட்ட கார் என்ற பெருமையை ஃபோர்டு ப்ரோன்கோ பெற்றிருக்கின்றது. இந்த காரின் இரு கதவுகள் கொண்ட வேரியண்ட் 59,305 (ரூ. 43,66,805) அமெரிக்க டாலர்களுக்கும், நான்கு கதவுகள் கொண்ட வேரியண்ட் 63,500 (ரூ. 46,75,695) அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விலையில் விற்கக் கூடிய ஃபோர்டு ப்ரோன்கோ காரையே பல கோடிகள் செலவிட்டு அரிசோனாவைச் சேர்ந்த தொழிலதிபர் பயன்பாட்டிற்கு வாங்கியிருக்கின்றார். இது தனித்துவமான தயாரிப்பு என்கிற காரணத்தினால் இத்தகைய அதிகபட்ச தொகையை அவர் செலவு செய்திருக்கின்றார்.
அரிசோனாவில் அரங்கேறிய இந்நிகழ்வு ஒட்டுமொத்த வாகன உலகையே அதிர செய்திருக்கின்றது. ஃபோர்டு ப்ரோன்கோ கார் 2.3 லிட்டர் ஈகோபோஸ்ட் 4 சிலிண்டர் மற்றும் 2.7 லிட்டர் ஈகோபோஸ்ட் 6 சிலிண்டர் வி6 எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதில் முதல் எஞ்ஜின் 270 குதிரை திறன்கள் மற்றும் 420 என்எம் டார்க்கையும், மற்றுமொரு எஞ்ஜின் 310 குதிரைதிறன்கள் மற்றும் 542 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது. தற்போது ஈட்டப்பட்டிருக்கும் பெருந்தொகையை ஃபோர்டு நிறுவனம் நற்காரியங்களுக்காக பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி காடுகளின் பராமரிப்பு மற்றும் அவுட்வார்ட் பவுண்ட் ஆகியவற்றிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் ஃபோர்டு நிறுவனத்தைச் சார்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.