Just In
- 44 min ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 2 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 3 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 5 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- News ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுவை, தெலுங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஏப்ரல் முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!
வரும் ஏப்ரல் 1 முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் கார் விற்பனை பெரும் பிரச்னையை சந்தித்ததால், அதனை அதிகரிக்கும் விதமாக விலை உயர்வு என்ற அஸ்திரத்தை எடுக்காமல் கார் நிறவனங்கள் தவிர்த்து வந்தன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கார் விற்பனை படுஜோராக இருந்து வருவதால், துணிச்சலாக கார் விலையை அவ்வப்போது உயர்த்தும் முடிவை எடுத்து வருகின்றன. அந்த வகையில், புத்தாண்டில் பல நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.
காலாண்டுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதை தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. அந்த வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. வரும் 1ந் தேதி முதல் கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஆகிய கார்களின் விலையை உயர்த்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக 1.5 முதல் 2 சதவீதம் என்பது சாதாரண விலை உயர்வாக இருக்கும். ஆனால், ஃபோர்டு கார் நிறுவனம் அதிகபட்சமாக கடைபிடிக்கப்படும் 3 சதவீதம் அளவுக்கு கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதனால், சில ஃபோர்டு கார்களின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு அதிக விலை உயர்வை சந்திக்கும் நிலை உள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக, இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஃபோர்டு எடுக்க உள்ளது.
ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.66 லட்சம் ஆரம்ப விலையில் இருந்தும், ஃப்ரீஸ்டைல் கார் ரூ.7.11 லட்சத்திலும், ஆஸ்பயர் ரூ.7.26 லட்சத்திலும், ஈக்கோஸ்போர்ட் ரூ.8 லட்சத்திலும், எண்டெவர் எஸ்யூவி ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!