Just In
- 34 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
உதிரிபாக சப்ளை பிரச்னையால், சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையிலும் கார் ஆலைகள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மற்றும் சனந்த் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.
கார் உற்பத்திக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகத்தின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கார் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கார் ஆலையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உதிரிபாக சப்ளையில் இருக்கும் தடங்கலை மனதில் வைத்து, வரும் 24ந் தேதி வரை சென்னை ஆலையில் உற்பத்தியை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சனந்த் ஆலையிலும் கூட உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. செமி கன்டக்டர் உதிரிபாகங்கள் சப்ளையில் இருக்கும் பிரச்னையால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியில் தொடர்ந்து சில மாதங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது.
இதனால், புதிய ஃபோர்டு கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்று அதிகரிக்கும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சப்ளை செய்வதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும்.
நடப்பு காலாண்டில் சென்னை மற்றும் சனந்த் கார் ஆலைகளில் கார் உற்பத்தி 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருப்பதாகம் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 7,000 கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 65,000 கார்களை ஃபோர்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!