Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா படுத்தும்பாடு... சென்னை ஃபோர்டு கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி நிறுத்தி வைப்பு!
கொரோனா பரவல் தீவிரத்தால், சென்னை ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி இருப்பதோடு, உயிரிழப்புகளும் கவலைக்குரிய அளவில் இருந்து வருகிறது. இதனால், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதுடன், அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமுடக்கம் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்கட்ட பொதுமுடக்கம் போதிய அளவில் பலன் தராத நிலையில், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
எனினும், வழிகாட்டு முறைகளுடன் பெரும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும் கார் ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக கூறி கார் ஆலை பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஹூண்டாய் மற்றும் ரெனோ - நிஸான் கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், சென்னையில் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் ஆலையும இன்றும், நாளையும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கருத்தில்கொண்டு பணியாளர்கள் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே 8 நாட்கள் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்திருந்தது ஃபோர்டு நிறுவனம். கடந்த 24ந் தேதிதான் மீண்டும் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது. ஆனால், பிற ஆலை தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் கொரோனா பிரச்னை காரணமாக, இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது.
இதனால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சற்றே கொரோனா அபாயத்திலிருந்து விடுபட்டுள்ளனர். எனினும், அரசு பொதுமுடக்கத்தை நீடிக்கும்பட்சத்தில், அதனை பொறுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆலைகளில் உற்பத்திப் பணிகள் துவங்குவது குறித்து கார் நிறுவனங்கள் பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!