Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நம்பவே முடியல... உற்பத்தி பணிக்கு முற்று புள்ளி வைக்கும் ஃபோர்டு... எங்கு தெரியுமா?
மிகப்பெரிய ஜாம்பவான் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு குறிப்பிட்ட ஓர் நாட்டில் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஃபோர்டு நிறுவனம் புதிய கார் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே இந்த நடவடிக்கையை அது மேற்கொள்ள இருக்கின்றது. இந்த திட்டம் ஃபோர்டின் உலகளாவிய மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதனடிப்படையில் பல்வேறு மாற்றங்களை உலகளவில் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இப்புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்நிறுவனம் பிரேசில் நாட்டில் மேற்கொண்டு வரும் கார் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் செயல்பட்டு வரும் கேமகரி (Camaçari) மற்றும் தவுபேட் (Taubaté) ஆகிய ஆலைகளிலேயே உற்பத்தி பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஹரிசோன்டே ஆலையில் மட்டும் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதாவது, கார்களுக்கான உதிரிபாகங்களின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட இருக்கின்றது. புதிய கார்கள் தயாரிப்பு இங்கு மேற்கொள்ளப்படாது.
உதிரிபாக உற்பத்தி பணியும்கூட இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வரை மட்டுமே செய்யப்பட என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. விற்பனைக்கு பிந்தைய சேவையை தங்கு தடையின்றி வழங்கும் நோக்கில் உதிரிபாக உற்பத்தி பணியை ஹரிசோன்டே ஆலையில் செய்ய ஃபோர்டு திட்டமிட்டிருக்கின்றது.
உற்பத்தி பணிகளை நிறுத்தினால் புதிய கார்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடு இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் கூறியிருக்கின்றது. அதாவது, இறக்குமதி வாயிலாக புதிய கார்களை பிரேசிலில் இருந்து விற்பனைக்குக் கொண்டு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது பிரேசிலில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார் மாடல்களான ஈகோஸ்போர்ட், கேஏ (ஃபிகோ) மற்றும் டி4 எஸ்யூவி கார்கள் சந்தையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், இதில் ஈகோஸ்போர்ட் கார் மட்டும் விற்பனையில் தொடர்ந்து நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இக்கார் பிரேசிலில் விற்பனைச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்நாட்டில் இறக்குமதி வரி மிக அதிகம் என்பதால் ஃபோர்டின் இந்த செயல்பாட்டிற்கு ஆப்பு ஏற்படலாம் என யூகிக்கப்படுகின்றது.
இருப்பினும், ஃபோர்டு இறக்குமதி வாயிலாக பிரேசில் சந்தையில் வர்த்தகத்தைத் தொடர இருப்பதாக அறிவித்திருப்பதால் நிச்சயம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து புதிய கார்களை ஏற்றுமதி செய்து அது விற்பனைக்கு வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஃபோர்டு இந்தியாவிற்கு பெரியளவில் ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது ஃபோர்டு இந்தியா உற்பத்தி பணியை அதிகரிக்கச் செய்யவும், மேம்படவும் உதவும். அதேசயம், தாய்லாந்து, ரஸ்யா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளில் செயல்படும் உற்பத்தி ஆலைகளுக்கும் ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைக்க அதிக வாய்ப்பு உருவாகியிருக்கின்றது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!