Just In
- 45 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 46 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோவிட்-19 தீவிரம்... ஹோண்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு... கார்களின் காத்திருப்பு காலம் உயரலாம்...
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா பகுதியில் உள்ள ஆலையை தற்காலிகமாக மூடுவதாக ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மொத்தம் 12 நாட்களுக்கு தபுகெரா கார் ஆலை மூடப்பட்டிருக்கும். மே 7ம் தேதி முதல் (இன்று) வரும் மே 18ம் தேதி வரையில், ஆலையை மூடுவதற்கு ஹோண்டா கார் இந்தியா முடிவு செய்துள்ளது.
ஹோண்டா கார் ஆலை மூடப்படுவது, கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் உதவி செய்யும். தபுகெரா ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக வரும் மே மாத மத்தியில் மூடலாம் என்றுதான் முதலில் ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முடிவு செய்திருந்தது. எனினும் தற்போது ஒரு வார காலத்திற்கு முன்பாகவே ஆலையை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா கார் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ராஜஸ்தான் மாநிலம் தபுகெராவில் செயல்பட்டு வந்த ஆலை தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், அதனை தற்போது தற்காலிகமாக மூடுவதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தபுகெரா ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு முன்னதாக எம்ஜி மோட்டார் இந்தியா, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஆலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 இரண்டாவது அலை காரணமாக பல நிறுவனங்களும் தங்களது ஆலைகளை மூடி வருகின்றன.
இதன் காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கார்களின் காத்திருப்பு காலம் உயர்வதற்கும் இது ஒரு காரணமாக அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது மூடப்பட்டுள்ள ஹோண்டா கார் நிறுவனத்தின் தபுகெரா ஆலை வரும் மே 19ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு கோவிட்-19 முதல் அலை காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோன்றதொரு நிலை தற்போது மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவிட்-19 இரண்டாவது அலை தவிர, செமி-கண்டக்டர்கள் பற்றாக்குறை பிரச்னையாலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் செமி-கண்டக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவடைவதற்குள் இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை பிரச்னை ஏற்பட்டு விட்டது.
இதனால் தற்போது இந்த இரண்டு பிரச்னைகளையும் சேர்த்தே எதிர்கொண்டாக வேண்டிய சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக கார்களின் காத்திருப்பு காலம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புதிய கார்களை முன்பதிவு செய்து விட்டு டெலிவரி பெற காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!