Just In
- 39 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
2022ம் ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்தது ஹோண்டா... ஆஹா செம்ம லுக்கா இருக்கே...
ஹோண்டா நிறுவனம் 2022 ஆண்டிற்கான சிவிக் காரை வெளியீடு செய்துள்ளது. இக்காரில் என்னமாதிரியான மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன என்பதுகுறித்த தகவலை இப்பிதிவில் காணலாம்.
ஹோண்டா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான சிவிக் காரை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இது, 11ம் தலைமுறை சிவிக் ஆகும். இதனையே ஹோண்டா தற்போது இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2022ம் ஆண்டிற்கான மாடல் ஆகும். ஆகையால், இக்கார் அடுத்த ஆண்டே விற்பனைக்கு வர உள்ளது.
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா வெளியிடவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இக்காரை முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது, ஹோண்டா. இதைத் தொடர்ந்து தற்போது இக்காரை வெளியீடு செய்துள்ளது.
இந்த வெளியீட்டின் வாயிலாக 2022 ஹோண்டா சிவிக் என்ன மாதிரியான அப்டேட்டுகளை பெற்றிருக்கின்றது என்பது பற்றிய தகவல் தெரிய வந்திருக்கின்றது. காரின் உட்பகுதி, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் எஞ்ஜினில் பல்வேறு புதுப்பித்தல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
காரின் வெளிப்புற தோற்றத்திலும் கணிசமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அப்டேட் 2022 சிவிக் காரை ஓர் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்திற்கு உயர்த்தியுள்ளது. இதற்காக லேசான கட்டுமஸ்தான பேனல்களை ஹோண்டா பயன்படுத்தியுள்ளது.
2022 சிவிக் காரின் 'ஏ' பிள்ளர்கள் 1.96 இன்ச் பின் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் பானட் சற்று நீளமானதாக காட்சியளிக்கின்றது. மேலும், ஷார்ப்பான உருவ அமைப்பையும் இக்கார் பெற்றிருக்கின்றது. ஆனால், இக்காரின் உயர் மற்றும் அகலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உட்பகுதியில் புதிதாக ஏர் வெண்டுகள் (காற்றோட்டத்திற்கான வழிகள்) வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், 10.2 இன்சிலான அகலமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்திலான 7.0 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இக்காரின் உட்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.
இதுதவிர, கூடுதல் தேர்வாக9.0இன்சிலான போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டத்தையும் ஹோண்டா 2022 சிவிக் காரில் வழங்கியிருக்கின்றது. இந்த 11ம் தலைமுறை ஹோண்டா சிவிக் காரில் 2.0 நேட்சுரல் அஸ்பயர்டு, 4 சிலிண்டர் டிஓஎச்சி ஐ-விடெக் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 158 பிஎச்பி மற்றும் 187 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 1.5 லிட்டர் விடெக் டர்போ, 4 சிலிண்டர் எஞ்ஜின் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது 180 எச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
தொடர்ந்து 2022 சிவிக் காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட் சிஸ்டம், டிராஃபிக் ஜேம் அசிஸ்ட் மற்றும் சோனார் சென்சார்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு