Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் பெட்ரோல் வாங்காதீர்கள்... பலருக்கு இதற்கான காரணம் தெரிவதில்லை!!
கோடை காலம் துவங்கிவிட்டது. இன்னும் சில வாரங்களுக்கு வெயில் வாட்டி வதைக்கவுள்ளது. இப்போதே பெரும்பாலானோர் மதிய நேரங்களில் பயணத்தை தவிர்க்கின்றனர். ஆனால் சிலருக்கோ மதிய நேரங்களிலும் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய காட்டாயம் இருக்கும்.
அத்தகையவர்களுக்காக, கோடை காலத்தில் பயணம் செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
- வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் இரயிலிலோ, பேருந்திலோ அல்லது கார்களிலோ பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் கட்டாயம் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள்.
- புற-ஊதா ஒளி மனித உடலின் தோல், கண்களை பாதிப்பது மட்டுமில்லாமல் தோல் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடியது. இதன் காரணமாகவே, புற-ஊதா ஒளியை உண்டாக்கக்கூடிய டிண்ட் கார்களின் கண்ணாடிகளில் வழங்கப்படுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.
- வெப்பம் மிகுந்த சூழலில் பயணிக்கும்போது மனித உடல் ஏகப்பட்ட ஆற்றல்களை இழப்பது இயல்பானது. இதனால் இந்த ஆற்றல் இழப்பு பெரிய பிரச்சனையில் சென்று முடியாமல் இருக்க, நோயாளிகள் தகுந்த மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைத்திருப்பது அவசியமாகும்.
- அதிக சூடு மனித உடலை பாதிப்பது மட்டுமின்றி பயணத்தின்போது எடுத்து செல்லப்படும் உணவுகள், காய்கறிகள் & பழங்கள் உள்ளிட்டவற்றையும் பாதிக்க செய்கிறது. எனவே இவற்றை ஒரு பையில் போட்டு வாகனத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் காற்று-குளிர்விப்பான் க்ளோவ் பாக்ஸ் போன்ற பகுதிகளில் வைத்து விடலாம்.
- வாகனங்கள் எப்போது பழுதாகும் என்பதை யூகிப்பது கடினமாகும். இதனால் சொந்த வாகனம் என்றால், தொலைத்தூர பயணங்களின் போது அவசரகால கருவிகளையும் கூடயே எடுத்து செல்லுங்கள்.
- நிழலில் நிறுத்தப்படாத கார்களின் உள்ளே, ஜன்னல்கள் திறந்திருப்பினும் வெப்பநிலை சுமார் 55- 60 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 15- 20 நிமிடங்களில் 12 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் பார்க் செய்யப்படும் காருக்கு உள்ளே குழந்தைகள் அல்லது செல்ல பிராணிகளை விட்டு செல்லாதீர்கள்.
- ஏசி பயன்பாட்டினால் காரின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் வெயில் காலத்தில் ஏசி-ஐ உபயோகிக்காமல் பயணிப்பது என்பது நிச்சயம் முடியாத காரியம். எனவே உட்புற கேபினில் உள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை அகற்றி ஏசி-க்கு அதிக சுமையை கொடுக்காமல், மைலேஜ் குறைவதை சிறிது தவிர்க்கலாம்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எப்போதும் தவறு. அதிலும் கோடை காலத்தில் உடலின் நீரிழப்பை அது அதிகரிக்க செய்யும். தொலைத்தூர பயணங்கள் என்றால், கடந்த 24 மணிநேரங்கள் மது அருந்தாமல் இருந்து வாகனத்தை ஓட்டுவதே நல்லது.
ஏனெனில் வெயில் காலத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துகின்றனர். அதிலும் பயணங்களின் போது கூடுதலாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தவிர்பதற்காக குறைந்தது ஒரு தண்ணீர் பாட்டிலாவது எடுத்து செல்லுங்கள்.
இருப்பினும் டிண்ட் எனப்படும் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளை கொண்ட சில கார்களை இப்போதும் பார்க்க முடிகிறது. அவ்வாறான வாகனங்களை தவிர்த்து விடுங்கள். அல்லது ஜன்னல் கண்ணாடியை முழுவதுமாக திறந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் மற்ற நேரங்களில் கூட மெக்கானிக் வரும்வரை காத்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் மதிய நேரத்தில் கார் பழுதாக நேர்த்தால் அன்றைய நாளே வீணாகி போய்விடும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கோடை நாட்களில் மதிய நேரங்களில் வாகனத்தில் பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருள்களை நிரப்புவதை தவிர்க்க பாருங்கள். எரிபொருளினால் எதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், மிக முக்கிய காரணமாக அதிக வெப்பநிலையில் பெட்ரோல் வாங்கும்போது அதன் அளவு மற்ற நேரங்களை காட்டிலும் குறைவாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிக விலையில் குறைவான பெட்ரோலை வாங்க நேரிடும்.