Just In
- 8 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
Don't Miss!
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அப்படிபோடு... புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆப்பிள் - ஹூண்டாய் இடையே பேச்சுவார்த்தை!
புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதி உயர்வகை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மின்சார கார் மாடலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் போலவே, இந்த எலெக்ட்ரிக் காரும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளறி உள்ளது.
ஆனால், ஆப்பிள் கார் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதும், அப்படியே அடங்கிப் போவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக ஆப்பிள் கார் குறித்த செய்திகள் மீண்டும் வெளியாகி வருகின்றன.
அதிலும், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல், ஆப்பிள் கார் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல்முறையாக இந்த தகவலை ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சிஎன்பிசி பத்திரிக்கையிடம் உறுதிப்படுத்தி உள்ளார். அதுவும், இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.
இந்த செய்தி வெளியான உடனே, ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் தென்கொரிய பங்கு சந்தையில் 19.42 சதவீதம் தடாலடியாக உயர்ந்தது. அதேபோன்று, ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஹூண்டாய் வியா, ஹூண்டாய் மொபிஸ் மற்றும் ஹூண்டாய் க்ளோவிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.
ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலையும் 8.41 சதவீதம் அதிகரித்தது. இந்த செய்திகள் ஒருபுறம் இருக்கும் நிலையில், ஹூண்டாய் - ஆப்பிள் கார் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் கார் வெளிவருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மின்சார கார் தயாரிப்புக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார் பிராண்டுகளில் பல வகையான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வர இருக்கின்றன. மேலும், இந்த கார்களின் பேட்டரியை சார்ஜ் செய்தால் குறைந்தது 500 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் - ஆப்பிள் இடையிலான தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் கார் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, இரு நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க கூட்டணி அமைத்தால், அது நிச்சயம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பாதையை வகுத்து கொடுக்கும். மேலும், இந்த கூட்டணியின் கார் மாடல் இந்தியாவிலும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!