Just In
- 8 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 55 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அப்படிபோடு... புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆப்பிள் - ஹூண்டாய் இடையே பேச்சுவார்த்தை!
புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதி உயர்வகை ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மின்சார கார் மாடலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் போலவே, இந்த எலெக்ட்ரிக் காரும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளறி உள்ளது.
ஆனால், ஆப்பிள் கார் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதும், அப்படியே அடங்கிப் போவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக ஆப்பிள் கார் குறித்த செய்திகள் மீண்டும் வெளியாகி வருகின்றன.
அதிலும், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல், ஆப்பிள் கார் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக ஆப்பிள் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல்முறையாக இந்த தகவலை ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சிஎன்பிசி பத்திரிக்கையிடம் உறுதிப்படுத்தி உள்ளார். அதுவும், இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.
இந்த செய்தி வெளியான உடனே, ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் தென்கொரிய பங்கு சந்தையில் 19.42 சதவீதம் தடாலடியாக உயர்ந்தது. அதேபோன்று, ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஹூண்டாய் வியா, ஹூண்டாய் மொபிஸ் மற்றும் ஹூண்டாய் க்ளோவிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.
ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலையும் 8.41 சதவீதம் அதிகரித்தது. இந்த செய்திகள் ஒருபுறம் இருக்கும் நிலையில், ஹூண்டாய் - ஆப்பிள் கார் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் கார் வெளிவருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மின்சார கார் தயாரிப்புக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார் பிராண்டுகளில் பல வகையான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வர இருக்கின்றன. மேலும், இந்த கார்களின் பேட்டரியை சார்ஜ் செய்தால் குறைந்தது 500 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் - ஆப்பிள் இடையிலான தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் கார் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, இரு நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க கூட்டணி அமைத்தால், அது நிச்சயம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பாதையை வகுத்து கொடுக்கும். மேலும், இந்த கூட்டணியின் கார் மாடல் இந்தியாவிலும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!