Just In
- 21 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 56 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாடு விட்டு நாடு போக முதல் முறையாக ரயிலில் பயணிக்கும் ஹூண்டாய் கார்கள்... எந்த நாட்டுக்கு போகிறது தெரியுமா?..
நாடுவிட்டு நாடு போக முதல் முறையாக ஹூண்டாய் கார்கள் ரயிலில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆலையை அமைத்து தனது உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது ஹூண்டாய் நிறுவனம். இங்கிருந்தே நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகின்றது. நாட்டிற்கு மட்டுமின்றி சில அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கும் இங்கிருந்தே அது கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.
அந்தவகையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கும் இங்கிருந்தே புதிய கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக சாலை மார்க்கமாகவே இதுவரை கார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால், இம்முறை தெற்கு ரயில்வேவைப் பயன்படுத்தி கார்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ரயிலைப் பயன்படுத்தி நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும். ஆகையால், ஏற்றுமதியில் புதிய வரலாற்றை ஹூண்டாய் படைத்திருக்கின்றது. தற்போது முதல் முறையாக 125 கார்கள் நேபாளத்திற்கு பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இது முதல் முறை என்பதால் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தயாரிப்பு பிரிவின் இயக்குனர் கணேஷ் மணி கொடியசைத்து ரயிலை வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின்போது தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் எஸ் சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்.
முதலில் ஹூண்டாய் கார்கள் இருங்காட்டுக்கோட்டையில் இருந்து வாலாஜாபாத் ரயில் முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்தே நேபாளத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ரயில் நேபாளத்தின் சோனாலி (Sonauli) எனும் நகரத்தை நோக்கி புறப்பட்டிருக்கின்றன. அங்கு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அந்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பகிரப்பட இருக்கின்றது.
இந்த ரயில் சென்று சேர 5 நாட்கள் வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை மார்க்கமாக அனுப்பி வைப்பதில் செலவீணம் அதிகம். அதுமட்டுமின்றி அதிக நாட்கள் மற்றும் கூடுதல் மாசுபடுத்துதலை ஏற்படுத்தும். எனவேதான் இதற்கு தீர்வு காணும் விதமாக ரயில் பாதை இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது.
இது செலவும் குறைவு. மேலும், சுற்றுச் சூழலுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 88 நாடுகளுக்கு ஏற்றுமதி வாயிலாகவே கார்களை விற்பனைச் செய்து வருகின்றது ஹூண்டாய். அண்மையில்தான் 3 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்ததற்கான கொண்டாட்டத்தில் நிறுவனம் மேற்கொண்டது.
இந்த நிலையிலேயே ஏற்றுமதி வரலாற்றில் புதிய நிகழ்வை எழுதும் விதமாக இந்த ரயில் வழி ஏற்றுமதி அமைந்திருக்கின்றது. இந்நிறுவனம் கப்பல் வாயிலாகவும் கார்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!