Just In
- 33 min ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 1 hr ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 3 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 8 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Movies உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எகிறும் பெட்ரோல், டீசல் விலை! மக்கள் எடுத்த மாற்று வழி! இத எதிர்பார்க்கவே இல்ல!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதனால் மக்கள் மாற்று வழியைத் தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விண்ணை எட்டும் வகையில் உயர்ந்து வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விலை நூறை தாண்டி பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலை ஏழை மற்றும் எளிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தினசரி வாகன ஓட்டிகளை பெட்ரோல், டீசல் விலையுயர்வு கடும் இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றது. இந்த நிலையில் மக்கள் பலர் பெட்ரோல், டீசல் எஞ்ஜினைக் கொண்ட வாகனங்களுக்கு பதிலாக மாற்று எரிதிறன் கொண்ட வாகனங்களை வாங்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜி தேர்வு இருக்கின்றது. இதனால் இயங்கும் வாகனங்களையே மக்கள் தற்போது அதிகம் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.
வெளியாகியிருக்கும் தகவலின்படி கடந்த காலத்தைக் காட்டிலும் 2020-21 ஆண்டில் அதிக சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. உதாரணமாக, 2020-2021ஆம் ஆண்டில் மட்டும் 1,57,954 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை மாருதி சுசுகி விற்பனை செய்திருக்கின்றது.
நடப்பாண்டு தொடங்கி ஏழு மாதங்களே ஆகின்ற நிலையில் இத்தகைய அதிகபட்ச எண்ணிக்கையிலான சிஎன்ஜி கார்களை மாருதி விற்பனை செய்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது நாட்டில் ஹூண்டாய், டாடா மற்றும் மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்களே சிஎன்ஜி வசதிக் கொண்ட வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றன. இதில், அதிக சிஎன்ஜி தேர்வை வழங்கும் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கின்றது.
இந்நிறுவனம், ஆல்டோ, எஸ் ப்ரெஸ்ஸோ, வேகன்ஆர், எர்டிகா, ஈகோ மற்றும் செலிரியோ ஆகிய மாடல்களை சிஎன்ஜி தேர்வில் வழங்குகின்றது. இத்துடன் இன்னும் சில மாடல்களை சிஎன்ஜி தேர்வில் வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் இன்னும் சில நிறுவனங்களும் சிஎன்ஜி வாகனங்களை விரைவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் அதன் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மாடல்களை சிஎன்ஜி தேர்வில் களமிறக்குவதற்கான பணியில் ஏற்கனவே களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?