Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெட்ரோல், டீசலில் இயங்கும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை நிறுத்தலாம் - அமிதாப் காந்த்!
பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகன உற்பத்தியாளர்கள் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயாராகி வருவதால், வழக்கமான ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை வரும் ஆண்டுகளில் நிறுத்தலாம் என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நாலு கால் பாய்ச்சலில் மாற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது வேகமாகவும், தெளிவான தேர்வாகவும் இருக்கும் எனவும் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
பேட்டரி உற்பத்திக்கான செலவு குறைந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது இன்னும் எளிமையாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை வெற்றிகரமானதாக மாற்றும் வல்லமை இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் அமிதாப் காந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை நடப்பாண்டு மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார் விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முன்னணியில் இருக்கிறது.
அதேபோல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன விற்பனையில் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இது பெரும்பாலும் வர்த்தக வாகனங்களையே உள்ளடக்கியுள்ளது. இதுதவிர ஏராளமான எலெக்ட்ரிக் டூவீலர்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த உதாரணம். எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வருகைதான், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்த வருடத்தின் மிக முக்கியமான ஹைலைட் ஆகும். ஆனால் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது.
எனவே டெலிவரி பணிகள் தொடங்கப்படும் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி வரும் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து விட்டு ஆர்வத்துடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் போன்ற தயாரிப்புகள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?