Just In
- 31 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காரின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றதற்காக அமெரிக்கா வாழ் இந்தியர் கைது! இது 2வது முறை! மானத்த வாங்கிட்டாரு!
காரில் வழங்கப்பட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, பின் இருக்கையில் அமர்ந்து சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
அமெரிக்கா வாழ் இந்தியர் பரம் ஷர்மா. இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள சேன் பிரான்சிஸ்கோவில் வசதித்து வருகின்றார். பலருக்கு சொகுசு கார்களுக்கு சொந்தக்காரரான இவர் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் மின்சார கார் மட்டுமல்ல பல்வேறு சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும் சொகுசு காரும்கூட.
ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி டிரைவர் வசதி இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே இக்காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சமாகும். இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதின் வாயிலாக டிரைவர் இல்லாமல் டெஸ்லா காரில் பயணிக்க முடியும். இந்த தானியங்கி வசதியை தனது அனைத்து மாடல் மின்சார கார்களிலும் டெஸ்லா வழங்கி வருகின்றது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காகவே அமெரிக்க வாழ் இந்தியரை சேன் பிரான்சிஸ்கோ போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றார். முன்னதாகவும் இவர் இதே போன்று இந்த ஸ்டண்டை செய்ததற்காக ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே பரம் ஷர்மா மீண்டும் அதே ஸ்டண்டை பொது சாலையில் வைத்து செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்தே காவலர்கள் அவரை தற்போது கைது செய்திருக்கின்றனர். 25 வயதான பரம் ஷர்மா அமெரிக்காவில் மிகந்த சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்தியர் ஆவார்.
தனது பகட்டான வாழ்க்கைகுறித்த வீடியோவை அவர் அவ்வப்போது வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில், டெஸ்லா காரில் சொகுசான முறையில், டிரைவர் யாரும் இல்லாமல் செல்லக்கூடிய வீடியோவை வெளியிட்டதன் காரணத்தினாலேயே தற்போது காவலர்களின் நடவடிக்கை வலையில் சிக்கியிருக்கின்றார்.
வீடியோவில், டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாதநிலையில் பரம் ஷர்மா மட்டும் பின்னிருக்கையில் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காட்சி அனைத்து சமூக வலை தளங்களில் வைரலாகியதை அடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.
முன்னதாக, தனது வீடியோவை பதிவிட்ட அந்த இளைஞர், "நீங்கள் இந்த காரை உங்களால் அவ்வளவு எளிதில் வாங்கிவிட. நீங்க எல்லாம் ஏழைகள். உங்களால் இக்காரை அவ்வளவு சுலபத்தில் வாங்க இயலாது" என பிறரை எரிச்சலூட்டும் வகையில் பிதற்றல் பதிவுகளை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது அவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இது ஒட்டுமொத்தமாக அவரின் இமேஜை ஸ்பாயில் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அவரை மட்டுமல்ல நம்மை போன்ற இந்தியர்கள் சிலரின் இமேஜையும் ஸ்பாயில் செய்யும் வகையிலேயே இளைஞரின் பிதற்றல் அமைந்துள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி வசதியை சில டெஸ்லா மின்சார கார் உரிமையாளர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே இந்த தானியங்கி வசதியைப் பயன்படுத்த அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு பயன்படுத்தலாம் என அமெரிக்க நிறுவனமான டெஸ்லா கூறுகின்றது. ஆகையால், முக்கியமான சில கட்டுப்பாடுகளைக் கையில் வைத்த வண்ணமே இந்த தானியங்கி வசதியை இயக்க வேண்டும். இல்லையெனில் இப்படிதான் வீணாக காவல்துறையின் கெடுபிடியில் சிக்க வேண்டியிருக்கும்.
Source: Cartoq
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...