Just In
- 24 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காரின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றதற்காக அமெரிக்கா வாழ் இந்தியர் கைது! இது 2வது முறை! மானத்த வாங்கிட்டாரு!
காரில் வழங்கப்பட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, பின் இருக்கையில் அமர்ந்து சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை அமெரிக்க போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
அமெரிக்கா வாழ் இந்தியர் பரம் ஷர்மா. இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள சேன் பிரான்சிஸ்கோவில் வசதித்து வருகின்றார். பலருக்கு சொகுசு கார்களுக்கு சொந்தக்காரரான இவர் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் மின்சார கார் மட்டுமல்ல பல்வேறு சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும் சொகுசு காரும்கூட.
ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி டிரைவர் வசதி இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே இக்காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சமாகும். இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதின் வாயிலாக டிரைவர் இல்லாமல் டெஸ்லா காரில் பயணிக்க முடியும். இந்த தானியங்கி வசதியை தனது அனைத்து மாடல் மின்சார கார்களிலும் டெஸ்லா வழங்கி வருகின்றது.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காகவே அமெரிக்க வாழ் இந்தியரை சேன் பிரான்சிஸ்கோ போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றார். முன்னதாகவும் இவர் இதே போன்று இந்த ஸ்டண்டை செய்ததற்காக ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே பரம் ஷர்மா மீண்டும் அதே ஸ்டண்டை பொது சாலையில் வைத்து செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்தே காவலர்கள் அவரை தற்போது கைது செய்திருக்கின்றனர். 25 வயதான பரம் ஷர்மா அமெரிக்காவில் மிகந்த சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்தியர் ஆவார்.
தனது பகட்டான வாழ்க்கைகுறித்த வீடியோவை அவர் அவ்வப்போது வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில், டெஸ்லா காரில் சொகுசான முறையில், டிரைவர் யாரும் இல்லாமல் செல்லக்கூடிய வீடியோவை வெளியிட்டதன் காரணத்தினாலேயே தற்போது காவலர்களின் நடவடிக்கை வலையில் சிக்கியிருக்கின்றார்.
வீடியோவில், டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாதநிலையில் பரம் ஷர்மா மட்டும் பின்னிருக்கையில் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காட்சி அனைத்து சமூக வலை தளங்களில் வைரலாகியதை அடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.
முன்னதாக, தனது வீடியோவை பதிவிட்ட அந்த இளைஞர், "நீங்கள் இந்த காரை உங்களால் அவ்வளவு எளிதில் வாங்கிவிட. நீங்க எல்லாம் ஏழைகள். உங்களால் இக்காரை அவ்வளவு சுலபத்தில் வாங்க இயலாது" என பிறரை எரிச்சலூட்டும் வகையில் பிதற்றல் பதிவுகளை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது அவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இது ஒட்டுமொத்தமாக அவரின் இமேஜை ஸ்பாயில் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அவரை மட்டுமல்ல நம்மை போன்ற இந்தியர்கள் சிலரின் இமேஜையும் ஸ்பாயில் செய்யும் வகையிலேயே இளைஞரின் பிதற்றல் அமைந்துள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி வசதியை சில டெஸ்லா மின்சார கார் உரிமையாளர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த காரணத்திற்காகவே இந்த தானியங்கி வசதியைப் பயன்படுத்த அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு பயன்படுத்தலாம் என அமெரிக்க நிறுவனமான டெஸ்லா கூறுகின்றது. ஆகையால், முக்கியமான சில கட்டுப்பாடுகளைக் கையில் வைத்த வண்ணமே இந்த தானியங்கி வசதியை இயக்க வேண்டும். இல்லையெனில் இப்படிதான் வீணாக காவல்துறையின் கெடுபிடியில் சிக்க வேண்டியிருக்கும்.
Source: Cartoq
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!