Just In
- 22 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- Movies அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்: ஐஆர்டிஏஐ அளித்த அதிரடி பரிந்துரை!
போக்குவரத்து விதிமீறினால் வாகன காப்பீட்டுக்கு கூடுதல் பிரிமீயம் தொகையை நிர்ணயிக்கும் வகையில், அதிரடி திட்டத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சாலை விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சாலை கட்டமைப்பு தரத்தை உயர்த்தினாலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் பல விபத்துக்கள் நடக்கின்றன.
இதனை மனதில் வைத்து, போக்குவரத்து விதிகளை மீறும் போக்கை குறைப்பதற்கு அதிரடி திட்டம் ஒன்றை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்த புதிய பரிந்துரையின்படி,"வாகனங்களின் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தரவுகள் தேசிய தகவல் மையத்தில் சேகரிக்கப்படும். ஒவ்வொரு விதிமீறல் வகைக்கு தக்கவாறு வாகனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். உதாரணத்திற்கு மது அருந்தி வாகனம் ஓட்டினால், வாகனத்தின் கணக்கில் 100 புள்ளிகள் சேர்க்கப்படும்.
அதுவே, விதிமீறியை தவறான இடத்தில் பார்க்கிங் செய்தால் 10 புள்ளிகள் வாகனத்திற்கான கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு விதிமீறலுக்கு தக்கவாறு புள்ளிகள் சேர்க்கப்பட்டு வரும்.
வாகனத்திற்கான காப்பீட்டை புதுப்பிக்கும்போது, போக்குவரத்து விதிமீறல் புள்ளிகள் அடிப்படையில் காப்பீட்டை புதுப்பிக்கும்போது வழக்கமான பிரிமீயம் தொகையுடன் சேர்த்து, விதிமீறலுக்கான கூடுதல் பிரிமீயம் நிர்ணயிக்கப்படும்.
அதாவது, 20 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. ஆனால், இந்த புள்ளிகளை தாண்டும்போது, புள்ளிகளுக்கு தக்கவாறு கூடுதல் பிரிமீயம் தொகை நிர்ணயிக்கப்படும்.
இருசக்கர வாகனத்திற்கு ரூ.100 முதல் ரூ.750 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.300 முதல் ரூ.1,500 வரையிலும் காப்பீட்டு பிரிமீயத்தில் கூடுதலாக கட்ட வேண்டி இருக்கும். வாகனத்தை யார் ஓட்டினாலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு வாகன உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்
வாகனத்தின் காப்பீட்டை புதுப்பிக்கும்போது இந்த கூடுதல் பிரிமீயம் தொகையை சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும். எனவே, ஓட்டுனர் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் இனி கவனமுடன் இருப்பதும் அவசியமாகிறது. டெல்லியின் தேசிய தலைநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தவும் ஐஆர்டிஏ பரிந்துரை செய்துள்ளது.
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!