Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சென்னையில் இன்னுமொரு ஷோரூமை திறந்த பிரபல கார் நிறுவனம்... இந்த முறை எந்த பகுதியில் தெரியுமா?
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தலைநகர வாசிகளை கவரும் நோக்கில் புதிதாக ஓர் ஷோரூமை சென்னையில் திறந்து வைத்திருக்கின்றது. புதிய ஷோரூம் எங்கு திறக்கப்பட்டுள்ளது. என்பது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தலைநகர வாசிகளைக் கூடுதலாகக் கவரும் வகையில் புதியதொரு ஷோரூமை சென்னை நகரத்தின் குறிப்பிட்ட ஓர் பகுதியில் திறந்து வைத்திருக்கின்றது. சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஜீப் இந்தியா நிறுவனமே தற்போது புதிதாக ஷோரூமை திறந்திருக்கும் நிறுவனம் ஆகும்.
ஓஎம்ஆர் எனப்படும் பழைய மஹாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியிலேயே நிறுவனம் தனது புதிய ஷோரூமை திறந்து வைத்திருக்கின்றது. விடிகே ஆட்டோமொபைல்ஸ் (VTK Automobiles) என அறியப்படும் 3எஸ் வசதிக் கொண்ட ஷோரூமிலேயே ஜீப் நிறுவனம் அதன் கார்களை விற்பனைக்காக நிறுத்தி வைத்திருக்கின்றது.
இந்த ஷோரூம் சுமார் 16,500 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில், எட்டு கார்களை வரிசையாக நிறுத்தி வைக்கும் வகையில் 4,000 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை இங்கு நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஜீப் நிறுவனம் ஆறு விற்பனையகங்களை செயல்படுத்தி வருகின்றது. சேலம் (1S), கோயம்பத்தூர் (1S), திருச்சி (3S), மதுரை (1S) மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகர்புற பகுதிகளில் மட்டுமே நிறுவனத்தின் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையிலேயே தனது ஷோரூமின் தொடரை பலப்படுத்தும் வகையில் புதிதாக சென்னை சோழிங்நல்லூர் பகுதியில் புதிய விற்பனையகத்தை நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 65 விற்பனையகங்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் ஜீப் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன எனப்து குறிப்பிடத்தகுந்தது.
ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அண்மைக் காலங்களாகவே இந்த நிலை நாட்டில் தென்படுகின்றது. இது இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த காரணத்தை முன்னிட்டே தனது விற்பனையகங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஜீப் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனை ஒப்பீட்டில் நிறுவனம் சராசரியாக 144 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் பெற்றிருக்கின்றது.
இந்த ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியில் தமிழ்நாடு 7 சதவீத பங்கினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிபுன் மஹாஜன் அண்மையில் உறுதிப்படுத்தினார். ஜீப் நிறுவனத்தின் ரேங்லர் மற்றும் காம்பஸ் ஆகிய எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு நாட்டின் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
அண்மையில் நிறுவனம் உள்ளூரில் வைத்து தயாரிக்கப்பட்ட ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்கப்பட்ட ரேங்லர் எஸ்யூவி காரை கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 53.90 லட்சம் என்ற விலையில் ரேங்லர் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஜீப் இந்தியாவில் கார் கட்டமைப்பைத் தொடங்கி விற்பனைக்கு வந்த முதல் கார் மாடல் இதுவே ஆகும். ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 262 எச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!