Just In
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 9 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விலையுயர்ந்த போர்ஷே சூப்பர் காரில் வந்த பிரபல நடிகர்! எதிரில் நின்று திருப்பி அனுப்பிய காவலர்... ஏன் தெரியுமா?
விலையுயர்ந்த காரில் வந்த பிரபல நடிகரை காவலர் ஒருவர் இடைமறைத்து அக்காரை திருப்பி அனுப்பியிருக்கின்றார். இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.
மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் மம்மூட்டியும் ஒருவர். இவரின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான், தவறான பாதையில் பயணித்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். துல்கர் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. முன்னதாக சக நடிகருடன் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார்.
இந்நிலையிலேயே இவரின் மற்றுமொரு போக்குவரத்து விதிமீறல் பற்றிய தகவல் வெளி வந்திருக்கின்றது. துல்கர் சல்மான் சிக்னலை விரைவாக கடக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதையில் வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவும் உறுதிப்படுத்தியுள்ளது.
அவ்வீடியோவில், தவறான பாதையில் வந்து நிற்கும் துல்கர் சல்மான் காரை, போலீஸார் ஒருவர் இடைமறித்து பின்னே செல்லும்படி கூறுகின்றார். இதனால் ரிவர்ஸிலேயே சென்ற அக்கார் மீண்டும் சரியான பாதையில் பயணித்தது. இந்த சம்பவம் முழுவதையும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி, துல்கருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாக்கியிருக்கின்றது. துல்கர் சல்மான் பயன்படுத்தியது போர்ஷே பனமேரா டர்போ சொகுசு காராகும். இந்த சூப்பர் கார் தமிழ்நாடு பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றது.
துல்கர் மற்றும் மம்மூட்டி இருவரும் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் '369' எனும் பதிவெண்ணைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த பதிவெண்ணைக் கொண்டே இது துல்கருடையது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆலப்புழாவிற்கு செல்லும் பை பாஸ் சாலையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
துல்கர் சல்மானின் இந்த விதிமீறல் செயல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருகின்றார். ஆகையால், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பஞ்சமின்றி காணப்படுகின்றது.
எனவேதான், துல்கரின் இந்த செயலை தவறான முன்னுதாரணம் என கூறி பலர் கடுமையாக சாடி வருகின்றனர். துல்கர் பயன்படுத்திய போர்ஷே பனமேரா டர்போ இந்தியாவில் ரூ. 2.13 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் உயர்நிலை சூப்பர் கார் மாடல் ஆகும். எனவேதான் இந்த உச்சபட்ச விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இக்காரை துல்கர் 2018ம் ஆண்டிலேயே வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த கார் தற்போது ஹைபிரிட் வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 543 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இக்கார் வெறும் 3.8 செகண்டுகளிலேயே 0 பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டிருக்கின்றது.
இத்தகைய திறன்மிக்க காரிலேயே துல்கர் சல்மான் தவறான பாதையில் வந்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது. போலீஸார் இவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. அண்மைக் காலங்களாக கேரளா மோட்டார்வாகனத்துறை அதிகாரிகள் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களின் அடிப்படையிலும் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆகையால், விரைவில் நடிகர் துல்கர் மீதும் போலீஸாரின் நடிவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு