Just In
- 1 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 26 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அகோரமாக்கிய அதிவேகம்.. பாலத்தில் மோதி இரண்டாக உடைந்த கியா செல்டோஸ் கார்... 3 பேர் பலியான பரிதாபம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பயங்கர விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்த்வாரா என்ற இடத்தில் நாக்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த படங்கள் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருக்கிறது.
இந்த விபத்தில் சிக்கிய கியா செல்டோஸ் கார் விபத்தில் சிக்கிய வேகத்தில் இரண்டு பாதியாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிவேகமாக வந்தபோது அந்த கியா செல்டோஸ் கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கிருந்த வாய்க்கால் பாலம் ஒன்றின் தடுப்புச் சுவிரில் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
விபத்தில் சிக்கிய காரின் உள்ளே இருந்தவர்களை மீட்பதற்காக இந்த கார் கருவி மூலமாக இரண்டாக உடைக்கப்பட்டு இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த படங்களை பகிர்ந்து கொண்ட அப்பகுதியை சேர்ந்தவர், பாலத்தில் மோதிய வேகத்தில் கார் இவ்வாறு இரண்டாக உடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் மற்றும் சிறந்த கட்டமைப்பு கொண்ட காராக இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது அது உதவாது என்று சில மாதங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே, இந்த கார் விபத்தும் கருத முடிகிறது. எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாது என்பதை இந்த விபத்து உணர்த்துவதாக உள்ளது. அதிவேகத்தில் யாராலும் உங்களை காப்பாற்ற இயலாது என்பதை நினைவில் கொண்டு அதிவேகமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற செய்திகள் பெரும் துயரத்தை தருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த விபத்தை ஒரு பாடமாக அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியே இந்த செய்தியை வெளியிடுகிறோம். அதிவேகம் உங்களுக்கு மட்டுமல்லாது சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகள், பிராயணிகள், பாதசாரிகளின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பத்தாரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தும் என்பதை மனதில் வைத்து வேகத்தை விட்டு விவேகமாக செயலாற்ற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
Images Courtesy: Facebook
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!