Just In
- 28 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 1 hr ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 3 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... இந்தியாவின் மானத்தை வாங்கிய மாருதி சுஸுகி கார்... என்ன ஆச்சு தெரியுமா?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பலேனோ காரின் மோதல் சோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) திகழ்கிறது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு கொண்டுள்ளது.
ஆனால் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார் என்றால், அது மாருதி சுஸுகி பலேனோதான். இது 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் ஆலையில் பலேனோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்பட்டு, இந்தியாவில் பலேனோ விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்த சூழலில் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ காரை, லத்தின் என்சிஏபி அமைப்பு (Latin NCAP) மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மோதல் சோதனையில் சுஸுகி பலேனோ 0 (பூஜ்ஜியம்) ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் தொடர்ச்சியாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தி வரும் நிலையில், 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 'மேட் இன் இந்தியா' சுஸுகி பலேனோ கார்தான் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த கார் 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாக லத்தீன் என்சிஏபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 20.03 சதவீதத்தையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 17.06 சதவீதத்தையும், பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 64.06 சதவீதத்தையும், பாதுகாப்பு அஸிஸ்ட்டில் 6.98 சதவீதத்தையும் மட்டுமே சுஸுகி பலேனோ பெற்றது.
நாங்கள் ஏற்கனவே கூறியபடி 'மேட் இன் இந்தியா' டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளிலேயே அசத்தி வருகின்றன. இதுவரை டாடா நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய மூன்று கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் என்பதால், இது இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் பெருமை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ 0 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியிருப்பது இந்தியாவிற்கும், சுஸுகி நிறுவனத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பலேனோவின் காரின் மிக முக்கிய போட்டியாளரான டாடா அல்ட்ராஸ் குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வே இதற்கு முக்கியமான காரணம். முன்பெல்லாம் கார் வாங்கும்போது விலை, மைலேஜ், டிசைன், கலர் ஆகிய அம்சங்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகமாக பார்ப்பார்கள்.
ஆனால் தற்போது மோதல் சோதனைகளில் எத்தனை ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை கார் வாங்கியுள்ளது? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் டாடா நிறுவனம் தொடர்ந்து அசத்தி வருவதால், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களில் ஒன்றான பன்ச் சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது.
இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குவதால், நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய கார்களை போன்று பன்ச் காரும் விற்பனையில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலை குறைவான கார் என்பது கூடுதல் சிறப்பம்சம். வரும் காலங்களில் டாடா நிறுவனத்திடம் இருந்து இன்னும் நிறைய பாதுகாப்பான கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!