Just In
- 38 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரபல கால் டாக்சியின் 100 சதவீத பங்கை வாங்கியது மஹிந்திரா... எத்தனை கோடி செலவில் தெரியுமா?..
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா இந்தியாவின் முன்னணி வாடகை சேவை நிறுவனங்களில் ஒன்றை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, மெரு கால் டாக்சி சேவை நிறுவனத்தின் முழு பங்கையும் கையகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணிசமான பங்குகளை ஏற்கனவே இந்நிறுவனம் கையகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது 100 சதவீத பங்கையும் மஹிந்திரா தனக்கு உரித்தானதாக மாற்றியிருக்கின்றது.
நீரஜ் குப்தா மற்றும் ஃபர்ஹத் குப்தா ஆகியோரிடத்தில் இருந்த பங்கினையே மஹிந்திரா நிறுவனம் தற்போது கையகப்படுத்தியுள்ளது. 44.14 சதவீதம் பங்கினை நீரஜ் குப்தாவும், 12.66 சதவீத பங்கினை ஃபர்ஹத் குப்தாவும் வைத்திருந்தனர். இந்த பங்குகளையே மஹிந்தரா தற்போது வாங்கியிருக்கின்றது.
ரூ. 76.03 கோடியை செலவு செய்து நீரஜ் குப்தாவின் பங்கையும், ரூ. 21.63 கோடியை வழங்கி ஃபர்ஹத்தா குப்தாவின் பங்கையும் மஹிந்திரா வாங்கியிருப்பதாக குறிப்பிடத்தகுந்தது. இதனால், ஒட்டுமொத்த பங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கை வசம் சேர்ந்திருக்கின்றது.
ஏற்கனவே, 43.20 சதவீத பங்கினை மஹிந்திரா வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. முழு பங்கினையும் மஹிந்திரா கொள்முதல் செய்திருப்பதால் மெரு கேப்ஸ் நிறுவனத்தின் அனைத்து முக்கிய அதிகாரிகளும் மாற்றப்பட இருக்கின்றனர்.
மெரு கேப்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக பிரவின் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக கடந்த 2017ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், தற்போது சிஇஓ-வாக இருக்கும் நீர்ரஜ் குப்தா வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை சிஇஓ-வாக நீடிப்பார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் பின்னரே புதிய சிஇஓ முழு பொறுப்பையும் ஏற்க இருக்கின்றார்.
கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டதே மெரு கேப்ஸ் நிறுவனம். ஓலா, ஊபர் போன்று கால் டாக்சி சேவையில் நல்ல வரவேற்பைப் பெற்று நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம், எரிபொருளால் இயங்கக் கூடிய எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டுமின்றி மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களையும் தனது சேவையில் பயன்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, இந்நிறுவனம் விமான நிலையம் போன்ற மிக முக்கியமான இடங்களிலேயே தனது சேவையை பிரதானமாக செய்து வருகின்றது. இத்தகைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையே மஹிந்திரா நிறுவனம் முழுமையாக கொள்முதல் செய்திருக்கின்றது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து புதிய கார்களின் விற்பனையைப் போல் கால்டாக்சி சேவையிலும் மஹிந்திரா நிறுவனம் மிக தீவிரமான செயல்பாட்டைத் தொடங்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!