Just In
- 6 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!
மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக வலுவான நிலையை எட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இதற்காக, தனது புதிய கார் மாடல்களுக்கு சூட்டுவதற்காக 4 புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பும், விற்பனையும் கணிசமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்களுமே புதிய எஸ்யூவி கார்களை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து வரும் மஹிந்திரா மேலும் 4 புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதற்காக, XUV100, XUV400, XUV700 மற்றும் XUV900 ஆகிய 4 புதிய பெயர்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ரகம் மற்றும் விலை அடிப்படையில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து ரகங்களிலும் புத்தம் புதிய மாடல்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதில், கேயூவி100 எஸ்யூவி மாடலானது எக்ஸ்யூவி100 என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதேபோன்று, மஹிந்திராவின் விலை உயர்ந்த மாடலாக இருந்து வரும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது எக்ஸ்யூவி900 என்ற பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
தற்போது மஹிந்திராவின் வெற்றிகரமான மாடலாக இருந்து வரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது தலைமுறை மாற்றம் செய்யப்பட்டு எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு பிரிமீயம் அம்சங்களுடன் வரும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அண்மையில் இந்த புதிய மாடலின் பெயர் வெளியிடப்பட்டது. இந்த கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைப்பிலும் முற்றிலும் வேறுபட்டு அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் வருகைக்கு பின்னர் எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பெயர் எக்ஸ்யூவி400. ஆம். இந்த மாடலானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி300 எஸ்யூவியைவிட இந்த புதிய எக்ஸ்யூவி400 எஸ்யூவியானது பரிமாணத்தில் பெரிய மாடலாகவும், 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும். இந்த புதிய மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!