Just In
- 46 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வேறு வழியே இல்லாமல் மஹிந்திரா எடுத்த திடீர் முடிவு... என்ன செய்வது என புரியாமல் குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்!
மஹிந்திரா நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனம் வாகன உற்பத்தியை 25 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு செமிகண்டக்டர் (Semiconductor) பற்றாக்குறைதான் காரணம். மஹிந்திரா நிறுவனம் தனது தொழிற்சாலைகளில் 7 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி 25 சதவீதம் குறையும்.
ஆனால் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி மற்றும் அறிமுக திட்டங்களில் இதன் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் பற்றாக்குறையால் மஹிந்திரா நிறுவனம் மட்டும் பாதிக்கப்படவில்லை. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி மற்றும் நிஸான் போன்ற நிறுவனங்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் செமிகண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செமிகண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது மற்றும் ஆலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரையில் நடப்பு செப்டம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தவுள்ளது. இந்தியாவில் வெகு விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. பொதுவாக பண்டிகை காலத்தில் கார்களின் விற்பனை வெகுவாக உயரும். பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பாக உற்பத்தியை குறைப்பது என்பது மஹிந்திரா கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் உற்பத்தியை குறைப்பதால் கார்களின் காத்திருப்பு காலம் உயரலாம். காத்திருப்பு காலம் உயர்ந்தால், வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களின் கார்களுக்கு மாறக்கூடும். எனவே மஹிந்திரா நிறுவனம் சில வாடிக்கையாளர்களை இழக்கலாம். தொடர்ந்து காத்திருக்கலாமா? அல்லது வேறு நிறுவனத்தின் காரை முன்பதிவு செய்யலாமா? என்ற குழப்பம் தற்போதே பலருக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனங்களை மட்டும் விற்பனை செய்யவில்லை. இதனுடன் மூன்று சக்கர வாகனங்கள், டிரக்குகள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகிறது. எனவே கார்கள் மட்டுமல்லாது, மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற வகையான வாகன உற்பத்தியும் இந்த முடிவால் பாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு எழுந்துள்ளது.
ஆனால் உற்பத்தியை குறைப்பது என்ற முடிவால் பயணிகள் வாகன பிரிவை தவிர மற்ற வாகன பிரிவுகள் பாதிக்கப்படாது என மஹிந்திரா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே மஹிந்திரா நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள், டிரக்குகள் மற்றும் டிராக்டர்கள் போன்ற வாகனங்களுக்காக காத்திருப்பவர்கள் நிம்மியடைந்துள்ளனர்.
எனினும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை முன்பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்கள் இந்த அறிவிப்பால் கவலையடைந்துள்ளனர். டெலிவரியில் தாமதம் ஏற்படும் என்பதுதான் இதற்கு காரணம். முன்னதாக செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே அதனை வாங்குவதற்கு பலரும் விரும்புகின்றனர். அதே சமயம் செமிகண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. எனவே மஹிந்திரா நிறுவனத்தால் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஆனால் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி மற்றும் அறிமுக திட்டங்களில் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது அந்த காருக்காக காத்திருப்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து ஒரு சில வேரியண்ட்களுக்கான விலையும் அறிவிக்கப்பட்டு விட்டது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே அதனை வாங்குவதற்கு பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர். செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாக டெலிவரியில் பிரச்னை ஏற்படாமல் இருந்தால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 விற்பனையில் சாதிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 சிறப்பாக உள்ளது.