Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க மஹிந்திரா தீவிரம்!
நொடித்து போய் நிற்கும் சாங்யாங் நிறுவனத்தில் உள்ள பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம், எஸ்யூவி தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானது. ஆனால், வர்த்தகத்தில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியாமல் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு சாங்யாங் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ரூ.2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன்மூலமாக, சாங்யாங் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றது.
மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு காரணமாக, சாங்யாங் நிறுவனம் புதிய மாடல்களை வெளியிட வாய்ப்பு கிட்டியது. சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதேநேரத்தில், சாங்யாங் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுடன் தொடர்ந்து பெரிய நஷ்டத்தில் இயங்கி வந்தது.
இதனால், புதிய முதலீடுகளை வழங்கப்போவதில்லை என்று மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும், சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்யவும் முடிவு செய்தது.
இதனிடையே, கடந்த மாதம் திவால் நிலையில் இருப்பதாக சாங்யாங் மோட்டார்ஸ் அறிவித்தது. வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அந்த நிறுவனம் உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.680 கோடி கடன் தொகையை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த சூழலில், சாங்யாங் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்காக புதிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.
அடுத்த வார இறுதியில் சாங்யாங் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும், நடைமுறைகள் அடுத்த மாத இறுதியில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 75 சதவீத பங்குகள் மஹிந்திரா வசம் உள்ளது. இதில், 30 சதவீத பங்குகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள 70 சதவீத பங்குகளை வேறு புதிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!