Just In
- 34 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 38 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைக்க அதிரடி... ஒன்றிய அரசு செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைப்பதற்காக ஒன்றிய அரசு தரமான சம்பவத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால் பெட்ரோல் பங்க்குகளை போல், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த குறையை போக்க ஒன்றிய அரசு தற்போது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 6ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 350 சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி (94), ஜெய்ப்பூர் (49), சண்டிகர் (48), ராஞ்சி (29) மற்றும் ஆக்ரா (10) உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் ஃபேம் இந்தியா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது முதல் கடந்த ஜூலை 9ம் தேதி வரை 3.61 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 600 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இது ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாவது கட்டம் ஆகியவற்றின் கீழ் ஒட்டுமொத்தமாக மானியம் வழங்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையாகும். கனரக தொழில்துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமலில் இருக்கும். இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் மக்களவையில் இந்த தகவலை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி கொண்டுள்ளன. மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளுடன், ஒன்றிய அரசின் சலுகைகளையும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது பெரிய சுமையாக இருக்காது. பொதுவாக பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றனர். ஆனால் ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் சுமை குறையும்.
இதுபோன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுதான் ஒன்றிய, மாநில அரசுகளின் எண்ணம். இதன் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு