Just In
- 1 hr ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 3 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 8 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 8 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி இலவசம்: மேப் மை இந்தியா சூப்பர் அறிவிப்பு!
ஆக்சிஜன் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலமாக, ஆக்சிஜன் வாகனங்களை நிகழ்நேர முறையில் கண்காணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நாடுமுழுவதும் பல இடங்களில் கொரொனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால், தேவைக்கும் உற்பத்திக்குமான விகிதத்தில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.
ஆக்சிஜன் சப்ளையை சரிசெய்வதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்த நிலையில், ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருப்பதுடன், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையை எதிர்பார்த்து நோயாளிகளும், உறவினர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த சூழலில், உயிர் காக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்ளும் வகையில், ஜிபிஎஸ் கருவிகளை இலவசமாக வழங்குவதாக மேப் மை இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை மேப் மை இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ரோஹன் வர்மா சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்துள்ளார். வாகனம் எங்கு இருக்கிறது, எவ்வளவு நேரத்தில் வந்தடையும் உள்ளிட்ட பல விபரங்களை நிகழ்நேர முறையில் கண்காணிப்பதற்கு இந்த ஜிபிஎஸ் கருவி உதவும். மருந்துவ உபகரங்கணங்கள் மற்றும் ஆக்சிஜன் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெறுவோர் இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.
ஆக்சிஜன் வாகனங்களில் இந்த ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், சில இடங்களில் ஆக்சிஜன் வாகனங்களை வழிமறிக்கும் நிலையும் உள்ளது. இந்த ஜிபிஎஸ் கருவி மூலமாக வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக தெரிந்து கொள்வதற்கும், தாமதம் குறித்த தகவல்களை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கூட அதிக அளவில் இந்த கருவியை பெறுவதற்கு பலர் தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர்த்து, கொரோனா சோதனை மையங்கள், சிகிச்சை மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் குறித்த தகவல்களையும் தனது செயலியில் மேப் மை இந்தியா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?