Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
குறிப்பிட்ட சில மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி நேற்று (ஏப்ரல் 16) அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலைகளை ரூ.22,500 வரையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான காரணமாக, வாகன தயாரிப்பு பணிகளுக்கும் ஆகும் செலவை மாருதி சுஸுகி நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. அதுவும் உண்மை தான், அலுமினியம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளின் மதிப்பு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையினால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதுவும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சில விதங்களில் பண செலவு மற்றும் நேர செலவுகளை ஏற்படுத்துகிறது.
விலை அதிகரிப்பு அனைத்து மாடல்களிலும் 1.6 சதவீதம் என்ற அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மாருதியின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையில் நிறுவனத்தின் செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட்டை தவிர்த்து மற்ற மாடல்கள் அனைத்தும் அடங்குகின்றன.
மாருதி சுஸுகி கார்கள் அரேனா ஷோரூம்களிலும், நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரேனா ஷோரூம்களில் விற்கப்படும் ஆல்டோ, வேகன்ஆர், டிசைர் மற்றும் எர்டிகா உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல் நெக்ஸா ப்ரீமியம் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் பலேனோ, எஸ்-க்ராஸ், சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக இவற்றின் விலை ரூ.22,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று மட்டுமே செய்திகள் வெளிவருகின்றன.
மற்றப்படி ஒவ்வொரு மாருதி காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விரிவாக தகவல்கள் எதுவும் தற்போது அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் அறிவிக்கப்படலாம்.
மாருதி நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதிகளவில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர், ஆல்டோ மற்றும் டிசைர் உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் கை கடந்த பொருளாதார ஆண்டில் ஓங்கியுள்ளது. இத்தனைக்கும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி இதே காரணத்திற்காக மாருதி கார்களின் விலைகள் ரூ.34,000 வரையில் உயர்த்தப்பட்டு இருந்தன. இந்த புதிய விலை அதிகரிப்பு இந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!