Just In
- 44 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்.. இதுக்குதான் வாத்தியாரே காத்திருந்தோம்!
மாருதி சுசுகியின் அரேனா கார் மாடல்களுக்கும் இனி அந்த சிறப்பு தொழில்நுட்ப வசதியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைத்த கார் மாடல்களில் மட்டுமே இந்த பிரத்யேக சிறப்பு வசதியை நிறுவனம் அறிவித்திருந்தது. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் சுசுகி இணைப்பு எனும் பிரத்யேக வசதியை வழங்கி வருகின்றது. 2018ம் ஆண்டில் இருந்து இந்த வசதியினை நிறுவனம் நெக்ஸா ரேஞ்ஜில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் வழங்கி வருகிறது.
இதன் வாயிலாக ஸ்மார்ட்போனை காருடன் இணைக்க முடியும். இதற்கு பிரத்யேக செயலி ஒன்றை நிறுவனம் வழங்குகின்றது. இத்தகைய வசதியினையே தனது அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களிலும் மாருதி சுசுகி வழங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தா திட்டத்தின்கீழ் இந்த செயலியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். சுசுகி நிறுவனம் அதன் 'சுசுகி கனெக்ட்' -இன் வாயிலாக பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. வாகனம் இருக்கும் இடத்தை லைவாக கவனிப்பது, வாகனம் பற்றிய தகவல், டிரைவிங் அனலடிக்ஸ் ரிப்போர்ட், ரோடு சைடு அசிஸ்டண்ட் மற்றும் வாகன செக்யூரிட்டி அலர்ட் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்குகின்றது.
இந்த வசதியினையே தற்போது அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களுக்கும் மாருதி சுசுகி அறிமுகம் செய்திருக்கின்றது. நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்கள் வாயிலாக இந்த சேவையை தனது பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. கூடுதல் அக்ஸசெரீஸ் வாயிலாக இதனை நிறுவனம் ழழங்க இருக்கின்றது.
அரேனா ஷோரூமில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 11,900 என்ற விலையில் சுசுகி கனெக்ட் சந்தா வழங்கப்படுகின்றது. நெக்ஸா வரிசையில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களுக்கு ரூ. 2,299 மூன்று ஆண்டுகளுக்கான கட்டணமாகவும், ரூ. 999 ஓராண்டிற்கான கட்டணமாகவும் வசூலிக்கப்படுகின்றது.
அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் இணைப்பு வசதி இல்லாதது ஓர் குறையாகவே தென்பட்டது. ஆனால், இந்த குறை இனியும் தொடராது. இதனை தீர்த்து வைக்கும் வகையில் நிறுவனம் தனது இணைப்பு வசதியை பிற கார் மாடல்களுக்கும் அறிமுகம் செய்திருக்கின்றது.
மாருதி சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இணைப்பு வசதியை அரேனா வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் அறிமுகம் செய்திருக்கின்றது. அதேவேலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நிறுவனம் இன்னும் பிற சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், ஆல்டோ காருக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சேமிப்பு பலனை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாருதி ஆல்டோ மட்டுமின்றி அதன் எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட், எர்டிகா, விட்டார ப்ரெஸ்ஸா, ஈகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.
நிறுவனம் தற்போது குருகிராம் மற்றும் மனோசர் தொழிற்சாலையில் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றது. சுமார் 60 சதவீதம் வரை உற்பத்தி பணிகள் குறைக்கப்படுவதாக அண்மையில் நிறுவனம் அறிவித்தது. சிப் தட்டுப்பாடு காரணமாக இந்நிலைக்கு மாருதி சுசுகி தள்ளப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே நிறுவனம் தனது உற்பத்தி பணிகளை குறைத்திருக்கின்றது. சிப்களை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக போஸ்ச் (Bosch) இருக்கின்றது.
இது மலேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடி வைரஸ் பரவல் காரணமாக அண்மையில் மூடியது. இதன்விளைவாக மாருதிக்கு செய்யப்படும் சிப் விநியோகம் தடைப்பட்டது. இதுமாதிரியான சிக்கலில் மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமின்றி உலகின் பிற முன்னணி நிறுவனங்களும் வாகன உற்பத்தியை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் சிக்கி தவித்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை தற்காலிமாக மூடியிருக்கின்றன. இதற்கு தற்போதைய சிப் உற்பத்தி குறைந்திருப்பதே காரணமாகும்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?