Just In
- 1 hr ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- 1 hr ago ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
- 2 hrs ago 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- 3 hrs ago ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
Don't Miss!
- Sports ஐபிஎல் வரலாற்றை மாற்றிய டிராவிஸ் ஹெட்.. பவர் பிளேவில் சாதனை படைத்த SRH.. தெறித்து ஓடிய மும்பை!
- News பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
- Movies என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
- Lifestyle இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்!
கார் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி கார் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை தன் வசம் வைத்துள்ளது மாருதி சுஸுகி. உள்நாட்டு விற்பனையில் யாரும் தொட முடியாத இடத்தில் இருந்து வரும் மாருதி நிறுவனம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை மாருதி சுஸுகி தொட்டுள்ளது.
அதாவது, கார் ஏற்றுமதி துவங்கப்பட்டு இதுவரை 2 மில்லியன் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1986-87 நிதி ஆண்டில் மாருதி கார் நிறுவனம் இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதியை துவங்கியது. கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 கார்களை ஹங்கேரி நாட்டிற்கு மாருதி ஏற்றுமதி செய்தது.
இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கார் ஏற்றுமதியை விரிவுப்படுத்தியது. கடந்த 2021-13ம் நிதி ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்றுமதியில் 1 மில்லியன் கார்கள் என்ற சாதனையை படைத்தது.
இதைதொடர்ந்து, அடுத்து மிக குறுகிய காலத்தில், அடுத்த ஒரு மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. கடைசியாக எஸ் பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனுடன் கார் ஏற்றுமதியில் 20 லட்சம் என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
தற்போது மாருதி கார் நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சிலி, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கார் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியா போன்றே, பிற நாடுகளிலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்ட்டோ, பலேனோ, டிசையர், ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் பிரபலமானதாகவும், வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல்களாகவும் உள்ளன. கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஜிம்னி எஸ்யூவியை ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி துவங்கியது நினைவிருக்கலாம்.