Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதி ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியானது!
ஆஃப்ரோடு கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் மாருதி ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
உலக அளவில் ஆஃப்ரோடு பிரியர்களிடம் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. அடக்கமான டிசைன், குறைவான பட்ஜெட், ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு பெரிய வர்த்தகத்தை கொடுத்துள்ளது.
இந்தநிலையில், இந்தியாவிலும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மேலும், சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பல புதிய கார் மாடல்களின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜிம்னி எஸ்யூவியின் அறிமுகமும் தள்ளி போய் உள்ளதாக தெரிகிறது.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் புதிய ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்தியன் கார் நியூஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. மேலும், வரும் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் 5 டோர் ஜிம்னி எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும், ஜிம்னி எஸ்யூவியின் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்றும், 5 டோர் மாடலின் உருவாக்கப் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், இந்தியாவில் 5 டோர் மாடல்தான் வர்த்தக ரீதியில் வெற்றி பெறும் என்பதால், அதன் உருவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எனினும், மஹிந்திரா தார் எஸ்யூவி 3 டோர் மாடலில் விற்பனை செய்யப்படுவதுடன், அதிக வரவேற்பை பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தேர்வுகளை வழங்கும் விதத்தில் ஜிம்னி எஸ்யூவி 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புதிய ஜிம்னி எஸ்யூவி குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே, கொலம்பியா மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி அறிமுகம் செய்ய இருக்கும் ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.