Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
மாருதி நிறுவனத்தின் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் விரைவில் மாருதியின் பிரபலமான கார் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர் டீசல் கார் விற்பனையை பல நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட டீசல் கார் விற்பனைக்கு முழுக்கு போட்டது.
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வுகளை வழங்குகின்றன. டீசல் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற்று வருகின்றன.
இதனையடுத்து, குறிப்பிட்ட கார் மாடல்களில் பிஎஸ்-6 தரத்திலான டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.
மாருதி நிறுவனம் தனது பிஎஸ்-4 கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை கொடுத்து வந்தது. இந்த நிலையில், ஃபியட் நிறுவனம் தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவது இல்லை என்று முடிவு செய்தது.
இதையடுத்து, தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது மாருதி சுஸுகி. இந்த புதிய எஞ்சின் விரைவில் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. தவிரவும், எஸ் க்ராஸ் மற்றும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களிலும் இந்த எஞ்சின் வழங்கப்படும்.
ஹூண்டாய், கியா கார்களின் டீசல் மாடல்களுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பு காரணமாகவே, தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் பிஎஸ்4- டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருந்தது. இதன் பிஎஸ்-6 எஞ்சின் மேம்படுத்தப்பட்டாலும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.
இந்த எஞ்சின் சியாஸ் காரில் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்து. இதனால், இந்த எஞ்சின் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!