Just In
- 46 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
மாருதி நிறுவனத்தின் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் விரைவில் மாருதியின் பிரபலமான கார் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர் டீசல் கார் விற்பனையை பல நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட டீசல் கார் விற்பனைக்கு முழுக்கு போட்டது.
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வுகளை வழங்குகின்றன. டீசல் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற்று வருகின்றன.
இதனையடுத்து, குறிப்பிட்ட கார் மாடல்களில் பிஎஸ்-6 தரத்திலான டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.
மாருதி நிறுவனம் தனது பிஎஸ்-4 கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை கொடுத்து வந்தது. இந்த நிலையில், ஃபியட் நிறுவனம் தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவது இல்லை என்று முடிவு செய்தது.
இதையடுத்து, தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது மாருதி சுஸுகி. இந்த புதிய எஞ்சின் விரைவில் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. தவிரவும், எஸ் க்ராஸ் மற்றும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களிலும் இந்த எஞ்சின் வழங்கப்படும்.
ஹூண்டாய், கியா கார்களின் டீசல் மாடல்களுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பு காரணமாகவே, தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் பிஎஸ்4- டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருந்தது. இதன் பிஎஸ்-6 எஞ்சின் மேம்படுத்தப்பட்டாலும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.
இந்த எஞ்சின் சியாஸ் காரில் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்து. இதனால், இந்த எஞ்சின் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!