Just In
- 35 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
மாருதி நிறுவனத்தின் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் விரைவில் மாருதியின் பிரபலமான கார் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர் டீசல் கார் விற்பனையை பல நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட டீசல் கார் விற்பனைக்கு முழுக்கு போட்டது.
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வுகளை வழங்குகின்றன. டீசல் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற்று வருகின்றன.
இதனையடுத்து, குறிப்பிட்ட கார் மாடல்களில் பிஎஸ்-6 தரத்திலான டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.
மாருதி நிறுவனம் தனது பிஎஸ்-4 கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை கொடுத்து வந்தது. இந்த நிலையில், ஃபியட் நிறுவனம் தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவது இல்லை என்று முடிவு செய்தது.
இதையடுத்து, தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது மாருதி சுஸுகி. இந்த புதிய எஞ்சின் விரைவில் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. தவிரவும், எஸ் க்ராஸ் மற்றும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களிலும் இந்த எஞ்சின் வழங்கப்படும்.
ஹூண்டாய், கியா கார்களின் டீசல் மாடல்களுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பு காரணமாகவே, தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் பிஎஸ்4- டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருந்தது. இதன் பிஎஸ்-6 எஞ்சின் மேம்படுத்தப்பட்டாலும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.
இந்த எஞ்சின் சியாஸ் காரில் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்து. இதனால், இந்த எஞ்சின் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!