Just In
- 24 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 51 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொரோனாவால் விற்பனையில் பெரும் சரிவு... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு?
கொரோனா லாக்டவுன் காரணமாக, கார் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியை பாதியாக குறைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் அசாதரணமான நிலை காணப்படுகிறது. குறிப்பாக, சில மெட்ரோ நகரங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால், லாக்டவுன் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கார் உற்பத்தி மற்றும் அதன் டீலர்களை கொரோனா பரவல் கடுமையாக பாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதனால், மீண்டும் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவலால் பல இடங்களில் கார் விற்பனை முடங்கி உள்ளதையடுத்து, உற்பத்தியை குறைக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில்," கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கும் வகையில், தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
கார் உற்பத்திக்காக தேவைப்படும் ஆக்சிஜனை பெறுவதற்காக, ஆலையிலேயே குறைந்த அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான எந்திரங்கள் உள்ளன. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக வழங்க உள்ளோம். இதனால், ஆலையை மே 1 முதல் 9ந் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த சமயத்தில் எங்களது ஆலைகளில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பல இடங்களில் எங்களது பாதிக்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து, உற்பத்தியை பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் விற்பனை 35 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், அந்நிறுவனத்தின் பல்வேறு கார் மாடல்களுக்காக சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
கையில் உள்ள இருப்பை வைத்து சமாளிக்க அந்நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளது. ஏற்கனவே 32,000 கார்களை இருப்பு வைத்திருக்கும் அந்நிறுவனம் தற்போது 90,000 கார்கள் வரை இருப்பு வைக்க முடிவு செய்துள்ளது.
எனினும், லாக்டவுன் கட்டுப்பாடுகள், உற்பத்தி நிறுத்தம் போன்ற பல காரணங்களால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார்கள் குறித்த நேரத்தில் டெலிவிரி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
ற்போதைய நிலையில், அனைவரும் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளதால், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு கார் விற்பனையில் மந்த நிலையே காணப்படும் என்று தெரிகிறது. கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே இயல்பு வர்த்தகத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!