Just In
- 56 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதி கார் புக்கிங் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
கொரோனா பரவல் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், வாகன உற்பத்தியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மாருதி கார் புக்கிங் செய்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பெரும் அவஸ்தையையும், அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பல இடங்களில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.
மேலும், கொரோனா பரவல் மீண்டும் ஆட்டோமொபைல் துறைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வாகன ஆலைகளை தற்காலிகமாக மூடி வைத்து வருகின்றன. இதனால், புதிய கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவிரி குறித்த நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா நேற்று செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலமாக பேசினார்.
அப்போது,"நாம் இப்போது முழுமையான லாக்டவுனில் இல்லை. கடந்த ஆண்டு போல தேசிய அளவிலான லாக்டவுன் அமலில் இல்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சில விலக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், எங்களது கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் பணியாளர்களின் வருகையில் பாதிப்பு இல்லாததால், அனைத்து ஆலைகளிலும் 100 சதவீதம் அளவுக்கு உற்பத்தி நடந்து வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால் புதிய மாருதி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதாவது, குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி பெறும் வாய்ப்பு தொடர்ந்து இருக்கிறது.
ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசரில் மாருதி கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு முழுமையான லாக்டவுன் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. அதேபோன்று, குஜராத்தில் உள்ள சுஸுகி கார் ஆலை செயல்படும் பகுதியிலும் லாக்டவுன் போன்ற கடுமையான விதிகள் அமல் செய்யப்படவில்லை. இதனால், உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!