Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது வேறயா... பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் இறங்கிய அடுத்த இடி...
பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மக்களின் தலையில் அடுத்த இடி இறங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் காலகட்டம்) கார்களின் விலையை மீண்டும் ஒரு முறை உயர்த்தவுள்ளதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. ஆனால் மாருதி சுஸுகி கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது உறுதியாக தெரியவில்லை. வரும் நாட்களில் மாருதி சுஸுகி நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
எனினும் கார்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக நடப்பாண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியிருந்தது.
இதை தொடர்ந்து நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை மீண்டும் உயரவுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து கொண்டே வருவதால், மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தெரிகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து மேலும் சில நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கார்களின் விலை மீண்டும் உயரவுள்ளது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கார்களின் விற்பனை குறையுமா? என்பது தெரியவில்லை. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில் முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே வாகன உற்பத்தியும் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பண்டிகை காலத்தில் மக்கள் புதிய வாகனங்களை ஆர்வமாக வாங்குவார்கள் என்பதால், தற்போதில் இருந்தே வாகன நிறுவனங்கள் அதற்கு தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை, புதிய தலைமுறை செலிரியோ விற்பனைக்கு வரவுள்ளது. புதிய தலைமுறை செலிரியோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது.
அப்படி சோதனை செய்யப்படும்போது கேமராவின் கண்களில் மாருதி சுஸுகி செலிரியோ கார் பலமுறை சிக்கியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ, பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல விதங்களில் மேம்பட்டிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!