Just In
- 37 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
வெற்றி பெற முடியாது... ரஜினியை போல் பின் வாங்கியது மாருதி சுஸுகி... வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் ரத்து?
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. கடும் குளிர் நிலவும் மலை பிரதேசங்கள் உள்பட இந்தியாவின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் சாலை சோதனையில் ஈடுபடுத்தி வந்தது.
2020ம் ஆண்டிலேயே வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கொரோனா வைரஸ் பிரச்னைதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன்பின் நடப்பு 2021ம் ஆண்டில் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இந்தியாவில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கிடப்பில் போட்டுள்ளதாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் நிரந்தரமாக ரத்து செய்து விட்டதா? அல்லது தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.
வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் காணப்படுகிறது.
இது உற்பத்தி செலவு அதிகரிப்பிற்கு வழிவகுத்து விடும். உற்பத்தி செலவுகள் அதிகரித்தால், பெரிய விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் வகையில் விலையை பொருத்தமாக நிர்ணயம் செய்வது சவாலான காரியமாக மாறிவிடும். இந்திய சந்தையை பொறுத்தவரை விலை நிர்ணயம் சரியாக இல்லாவிட்டால் ஒரு கார் வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலையில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர முடியுமா? என்ற தயக்கம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் ஒவ்வொரு மாதமும் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி வருகின்றன.
ஒரு சில கார்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை சர்வ சாதாரணமாக பதிவு செய்கின்றன. எனவே மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கையைதான் ஈட்டும் என்றால், வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி நிறுவனம் விரும்பாது.
ஆனால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலும், மனேசரில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே அதன் சோதனை ஓட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்