Just In
- 10 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை... மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு!
வெளிப்படைத்தன்மையுடன் வாடிக்கையாளர்களுக்கு நேரடி கார் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரே குடையின் கீழ் தனது கார் விற்பனையை கொண்டு வரும் முயற்சியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் வகையிலும், டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் அனைத்து தரப்பிலும் நன்மை பெறும் வகையில் இந்த புதிய விற்பனை திட்டம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட விற்பனை சூழலை உருவாக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் Retail Of The Future (ROTF) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து புதிய கார்களையும் நேரடியாக புக்கிங் செய்து வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
இருப்பில் உள்ள அனைத்து கார்களும் புக்கிங் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் சரியான விலையில் கார்களை வாங்கும் வாய்ப்பை பெற முடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே விலையில் காரை வாங்குவதற்கு இந்த திட்டம் உறுதி செய்யும்.
அதேபோன்று, டீலர்கள் பாதிக்கப்படாத வகையிலும் இந்த திட்டம் இருக்கும். அதாவது, கார் விற்பனையை அதிகரிக்கும் சூழலை உருவாக்குதல், டெலிவிரி மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்டப் பணிகளுக்காக டீலர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும்.
இந்த திட்டத்தின் மூலமாக, டீலர்களில் கார் இருப்பில் தேங்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதனால், பொருளாதார ரீதியில் டீலர்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய இந்த காலக்கட்டத்தில் டீலர்களுக்கான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் அமையும்.
அதேநேரத்தில், புதிய கார்களை விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும். ஆனால், வாடிக்கையாளர்கள் நேரடியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து புக்கிங் செய்து காரை வாங்க முடியும்.
நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டு காலத்தில், அதாவது, அக்டோபர் - டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் இந்த திட்டத்தை இந்தியாவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய கார்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!