Just In
- 9 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 12 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 14 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் கிடைப்பதைவிட மிக குறைந்த விலையில் கிடைக்கும்... சொன்னது யார் தெரியுமா?
சீனாவில் விற்பனையில் இருப்பதைவிட மிக குறந்த விலையில் டெஸ்லா மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது டெஸ்லா. குறிப்பாக, மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது.

வெவ்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளியிட்ட தகவலால் இதன் உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமையும் என்பதே பெரும் சந்தேகமாகியிருக்கின்றது. அண்மையில் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, தங்களது மாநிலத்திலேயே டெஸ்லா மின்வாகன உற்பத்தி ஆலை அமைய இருப்பதாக சமூக வலை தளப்பக்கத்தின் வாயிலாக தகவல் வெளியிட்டிருந்தார்.

முன்னதாக, தமிழகம், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இவர்களின் அழைப்பை ஓரம் கட்டிவிட்டு தனது மாநிலத்திற்கு தட்டிச் சென்றது எடியூர்ப்பா அரசு. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே டெஸ்லா கார் உற்பத்தி ஆலை அமைய இருக்கின்றது.

இந்நிலையில், டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெஸ்லா மின்சார கார்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் மத்தியில் கூடுதல் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றது.

அண்மையில் இதுகுறித்து பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்க மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவிற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்க இருப்பதாக தெரிவித்தார். இது சீனாவில் இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு வாகன உற்பத்தி செலவைக் குறைக்க நிறுவனத்திற்கு உதவும்.

ஆகையால், அந்நாட்டில் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிக குறைந்த விலையில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பது தெளிவாக தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மத்திய அமைச்சரின் தகவல் அமைந்திருக்கின்றது.

டெஸ்லா நிறுவனம் தனது இந்திய செயல்பாட்டிற்காக மூன்று முக்கிய அதிகாரிகளை கடந்த ஜனவரி மாதமே நியமித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, வாகனங்களை அறிமுகப்படுத்தும் பணியிலும் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

டெஸ்லா நிறுவனம் தற்போது மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் என நான்கு விதமான மாடல் மின்சார கார்களை விற்பனைச் செய்து வருகிறது. இதில், டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் காரே இந்தியாவில் முதலில் வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றும் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராகும்.

மாடல் 3 மின்சார கார் பல விதமான பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 400 தொடங்கி 650 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனில் இக்கார் கிடைத்து வருகின்றது. இத்தகைய அதிக ரேஞ்ஜ் திறன் கொண்ட வாகனத்தையே இந்தியாவில் டெஸ்லா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.