Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
டெஸ்லா கார் ஆலையை கொண்டு வர கங்கணம் கட்டிய அமைச்சர் நிதின் கட்காரி
இந்தியாவில் கூடிய விரைவில் கார் உற்பத்தியை துவங்குமாறு டெஸ்லா கார் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார். மேலும், டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
உலக அளவில் மின்சார கார் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதற்கான திட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, பல புதிய திட்டங்களை வகுத்துள்ளதுடன், இந்திய சப்ளையர்களிடம் இருந்தே மின்சார வாகனங்களை உதிரிபாகங்களை பெறுமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் முக்கிய கேந்திரமாக உள்ள சீனாவிற்கு செக் வைக்கும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மின்சார வாகன உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், ரெய்சினா டயலாக் 2021 என்ற நிகழ்வில் அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது மின்சார வாகனத்துறை, மின்சார வாகன பேட்டரி தயாரிப்புத் துறை மற்றும் வாகன அழிப்புத் திட்டங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மேலும், பல முக்கிய விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். ரெய்சினா டயலாக் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது," டெஸ்லா நிர்வாகத்துடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பேசினேன். அப்போது, கூடிய விரைவில் இந்தியாவில் மின்சார கார் உற்பத்தியை துவங்குமாறு டெஸ்லா நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்களிடம் குறிப்பிட்டேன். மேலும், ஏற்கனவே இந்திய சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை டெஸ்லா கார் நிறுவனம் பெற்று வருகிறது. எனவே, இது சாதகமானதாக இருக்கும்.
மேலும், டெஸ்லா கார் தொழிற்சாலைக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும். டெஸ்லா நிறுவனம் தனது கார்களுக்கான தனி உதிரிபாக சப்ளையர்களுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், மின்சார கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.
கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது நல்லது. இல்லையெனில், இந்தியாவில் செயல்படும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் டெஸ்லாவுக்கு இணையான தரத்தை விரைவில் எட்டிவிடுவர்.
நாளுக்கு நாள் இந்தியாவில் செயல்படும் மின்சார வாகன நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதனால், டெஸ்லா தர நிலைகளுக்கு எளிதாக செல்லும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கூடிய விரைவில் டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை துவங்குவது உசிதமாக இருக்கும். இது அவர்களுக்கு பயன் அளிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், டெஸ்லா நிறுவனம் தனது இந்தியப் பிரிவை பெங்களூரில் பதிவு செய்துள்ளது. கார் விற்பனையை துவங்குவதற்காக இந்த பிரிவை நிறுவியிருக்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் கார் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ரூ.35 லட்சத்தில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்தியாவிலேயே டெஸ்லா கார்களை உற்பத்தி செய்யும்போது, மிக சரியான விலையில் டெஸ்லா கார்களை பெறுவதற்கான வாய்ப்பை இந்தியர்கள் பெற முடியும்.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
பைக்கைவிட ஸ்கூட்டர் கம்மியாதான் மைலேஜ் கொடுக்கும் ஏன் தெரியுமா?
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்