Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாகன ஓட்டிகளால் மது அருந்தவே முடியாது... ஆப்பு வைக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்! நாம ஷாக்காக வேண்டாம்!
புதிய வாகனங்களை ட்ரிங்க் அண்ட் டிரைவக் கண்டறியும் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வழங்குவதற்கான விதியை உருவாக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரசை விட கொடிய உயிர் கொல்லியாக சாலை விபத்துகள் இருக்கின்றன. நாளுக்கு நாள் இதனால் இறப்போர் பலர். ஆகையால் இதன் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. எனவே இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அரசும், போக்குவரத்துத்துறையும் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.
இதன்படி, இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சியின் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டைக் காட்டிலும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் கணிசமான அளவு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது. இதனை சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றி ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
இதுபோன்ற முயற்சியில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவில் ஓர் புதிய யுக்தி, விபத்தைக் குறைப்பதற்காக கையாளப்பட இருக்கின்றது. அந்நாட்டில் மதுவால் (குடி போதையில் வாகனம் ஓட்டுவதால்) அதிகளவில் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.
இதனைக் குறைக்கும் நோக்கில் வாகனத்தில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர அமெரிக்காவின் செனட் இல்லம் திட்டமிட்டுள்ளது. அதாவது, வாகன ஓட்டி மது அருந்தியிருந்தால் கண்டறியும் தொழில்நுட்பத்தை (drunk-driver-detecting technology) அனைத்து வாகனங்களிலும் வழங்குவதற்கான புதிய விதியை அமெரிக்க அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதைத் தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவும். இதன் விளைவாக மது போதையால் அரங்கேறும் விபத்துகள் பெருமளவில் குறையும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இத்திட்டத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டிருக்கின்றது.
அமெரிக்காவில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது கடுமையான குற்றங்களில் ஒன்றாகும். ஆகையால், இந்த விதிமீறலுக்கு மிகக் கடுமையன தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆகையால், இந்த விதிமீறல்கள்-வாதிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதிய மசோதா உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் இந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் 38,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் அரங்கேரியிருப்பது தெரிய வருகின்றது.
இதில் பெரும்பாலான விபத்து சம்பவங்கள் மது போதையினால் அரங்கேறியவை ஆகும். எனவேதான் அமெரிக்க அரசு இந்த விஷயத்தில் சற்று தீவிரமாக களமிறங்க திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் அனைத்திலும் டிரிங்க் அண்ட் டிரைவைக் கண்டறியும் தொழில்நுட்பம் இடம் பெற இருப்பது உறுதியாகியுள்ளது.
விபத்தைக் குறைக்கும் நோக்கில் பொருட்டில் அமெரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் முன்னெடுப்பு அந்நாட்டு குடிமகன்கள் (மது பிரியர்கள்) மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேசமயம், ஓர் சிறந்த பாதுகாப்பு அம்சம் என வாகத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..