செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ கார்களின் அறிமுகம் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவிக்களின் புதிய தலைமுறை மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். இதில், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

அதே சமயம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த இரண்டு எஸ்யூவிகளின் அறிமுகமும் தள்ளிப்போகலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர்களுக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுதான் இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இசியூ அல்லது எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்களை (ECU - Electronic Control Unit) உற்பத்தி செய்வதற்கு, இந்த செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுகின்றன.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

அத்துடன் வாகனங்களின் இன்னும் பல்வேறு மின்னணு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மற்ற எலெக்ட்ரானிக்குகளை உற்பத்தி செய்வதற்கும், செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்னையால் மஹிந்திரா நிறுவனம் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது என கூற முடியாது. உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது இந்த பிரச்னையால் தடுமாறி வருகின்றன.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

வாகனங்களின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இசியூ ஆகியவற்றுக்கு இந்த சிப்கள் மிகவும் முக்கியமானது. இந்த பாகங்கள் இல்லாமல், கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியாது. செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஏற்கனவே மஹிந்திரா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கு இந்த பிரச்னைதான் காரணம். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தார் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதும், முன்பதிவுகள் குவிந்து வருவதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

ஆனால் செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், மஹிந்திரா நிறுவனத்தால் புதிய தார் எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்ய முடியவில்லை. இந்த சூழலில், செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடரும் என மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை... புதிய தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ அறிமுகம் தள்ளி போகிறது?

எனவேதான் புதிய கார்களை அறிமுகம் செய்வதை தற்போதைக்கு தள்ளி வைக்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு ஏற்பட்டதை போன்ற டெலிவரி பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New-gen Mahindra XUV500, Scorpio Launch Could Be Delayed - Here Is Why. Read in Tamil
Story first published: Wednesday, February 17, 2021, 23:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X