Just In
- 46 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...
உலகளவில் பிரபலமான ஸ்கோடா கார்களுள் ஒன்றான ஆக்டேவியாவின் நான்காம் தலைமுறை கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் அவ்ரங்காபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த ஸ்கோடா செடான் காரின் தயாரிப்புகள் பணிகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவி மும்பை பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் புதிய தலைமுறை ஆக்டேவியா கார் மறைப்புகளால் மறைக்கப்படவில்லை. டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் பின்பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுகம் இந்த ஏப்ரல் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்க்யுபி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆக்டேவியா ஸ்கோடாவின் லேட்டஸ்ட் டிசைன் மொழியினை ஏற்றுள்ளது.
முதல் ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே ஆக்டேவியா கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் நல்லப்படியாகவே இருந்து வந்தது. ஆனால் 2012க்கு பின் வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி கார்களின் பக்கம் விழ துவங்கியது.
இதனால் ஆக்டேவியாவின் விற்பனை சிறிது தடுமாறினாலும், உடனடியாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2013ல் மூன்றாம் தலைமுறை ஆக்டேவியாவை அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஆக்டேவியா கார்களின் விற்பனை சற்று வேகமெடுத்தது.
ஆற்றல்மிக்க என்ஜின்களினாலும், விசாலமான உட்புறத்தினாலும் ஆக்டேவியாவின் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாக உள்ளது. இதனை அதிகரிக்கும் நோக்கில் தான் புதிய நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு வரவுள்ளது.
2019ல் 10 தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் வருகைக்கு முன்பு வரையில் ஆக்டேவியா கார்களின் விற்பனை மிக நன்றாக இருந்தது. புதிய ஆக்டேவியா பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்விலும் ஐரோப்பிய சந்தைகளில் ஸ்கோடா ஆக்டேவியா விற்பனை செய்யப்படுகிற்து.
ஆனால் இரண்டாவது பெட்ரோல் என்ஜின் தேர்வு இந்திய வருகைக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. புதிய ஆக்டேவியா தற்போதைய ஆக்டேவியாவை காட்டிலும் சுமார் 19மிமீ நீளம் மற்றும் 15மிமீ அகலம் அதிகம் கொண்டதாக இருக்கும்.