Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியை கை விட பிரபல கார் நிறுவனம் திட்டம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!
உலக புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று விரைவில் எரிபொருளால் இயங்கக் கூடிய வாகன தயாரிப்பிற்கு முற்று புள்ளி வைக்க இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களால் இயங்கக் கூடிய வாகனங்களின் தயாரிப்பிற்கு முற்று புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, எரிபொருளால் இயங்கக் கூடிய வாகனங்களின் தயாரிப்பை மட்டுமே அது முற்றிலுமாக கை விட இருக்கின்றது.
இந்த நடவடிக்கையை 2030ம் ஆண்டிற்குள் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஸான் நிறுவனமே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜப்பானிய நிறுவனம் ஆகும். சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், எரிபொருளால் இயங்கக் கூடிய வாகனங்களின் விற்பனையைக் குறைத்து பசுமை திறனுடைய வாகனங்களின் (மின்சார வாகனம்) விற்பனையை அதிகரிக்கச் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே நிஸான் நிறுவனம் அதிரடி அறிவிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கக் கூடிய வாகனங்களின் தயாரிப்பை கைவிட இருப்பதாக அறிவித்திருக்கின்றன.
அதேசமயம், அதன் தயாரிப்புகள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற இருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது. இதற்கான பணியையே 2030ம் ஆண்டிற்குள் தொடங்க இருப்பதாக அது தற்போது அறிவித்திருக்கின்றது.
புதிய மின் வாகனங்களுக்காக புதிய வழி வகுத்தலை நிஸான் செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. அதாவது, தனது மின் வாகன தயாரிப்புகள் தற்போது சந்தையில் இருக்கும் பிற எலெக்ட்ரிக் வாகனங்களைக் காட்டிலும் குறைந்த விலை மற்றும் அதிக ரேஞ்ஜ் என்ற சூப்பர் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதிலும் நிஸான் அதிக கவனத்துடன் செயல்பட தொடங்கியிருக்கின்றது. மேலும், அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் நோக்கில் செயல்படவும் அது திட்டமிட்டுள்ளது.
நிஸான் தற்போது விற்பனைச் செய்து வரும் பெரும்பாலான வாகனங்கள் குறைந்த விலைக் கொண்ட வாகனங்களாகவே கிடைத்து வருகின்றன. இதே ரகத்திலேயே தனது மின்வாகனங்களையும் உருவாக்க நிஸான் திட்டமிட்டிருக்கின்றது.
நிஸான் நிறுவனம் மிக சமீபத்தில் அதன் முதல் மின்சார காரான லீஃப் மாடலை இந்த உலகில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரை அறிமுகம் செய்த வெகு சில நாட்களிலேயே 5 லட்சம் யூனிட்டுகளுக்கான விற்பனையை அது பெற்றது. இது பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரிய வரவேற்பாகும்.