Just In
- 3 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 4 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மேக்னைட் கொடுத்த நம்பிக்கை... கார்களின் விலையை துணிச்சலாக உயர்த்தும் நிஸான்!
ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. நிஸான் மற்றும் டட்சன் என இரண்டு பிராண்டுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு கார் விலையை உயர்த்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இருந்து கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பெற்று வருகிறது. இதனால், கார் நிறுவனங்கள் உற்சாகமடைந்தன.
மேலும், கார் வர்த்தகம் ஸ்திரமான நிலையை மீண்டும் எட்டி இருப்பதால், கடந்த ஜனவரி மாதத்தில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவீனம் மற்றும் மூலப்பொருட்களின் விலையை மனதில் வைத்து கார் விலையை உயர்த்தின.
இது வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காலாண்டுக்கு ஒருமுறை சந்தை நிலையை வைத்து கார் விலையை உயர்த்துவது தயாரிப்பு நிறுவனங்களின் உத்தியாக உள்ளது.
அதன்படி, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி மாருதி சுஸுகி விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது நிஸான் நிறுவனமும் வரும் ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிஸான் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"கடந்த சில மாதங்களாகவே கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் விலை அதிகரித்து வருகிறது. எனினும், வாடிக்கையாளர் நலன் கருதி, அந்த சுமையை ஏற்று வந்தோம்.
ஆனால், தொடர்ந்து மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் விலை உயர்ந்து வருவதால், மேற்கொண்டு சுமையை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் 1ந் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம். நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இருப்பினும், எங்களது கார்களின் விலை மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் கார் விலையை உயர்த்தும் முடிவை நிஸான் கையில் எடுத்துள்ளது. வேரியண்ட்டிற்கு தக்கவாறு விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நிஸான் நிறுவனத்தின் மேக்னைட், கிக்ஸ், டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலை வரும் 1ந் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மேக்னைட் கார் வாங்க இருப்போருக்கு இது நிச்சயம் கூடுதல் சுமையாக இருக்கும்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!