Just In
- 53 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
"15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு கிடையாது"... ஆஹா, விடிவு காலம் பிறக்க போகுது!!
15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு செய்யக்கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதனால், கொசு வண்டிபோல் புகையை கக்கி வரும் அரசு வாகனங்கள் விரைவில் வெளியேறும் சூழல் உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அண்மையில், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை உயர்த்தியது. முன்னதாக, 90 சதவீத பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் என்ற வீதத்திலேயே கலக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதனை 20/80 ஆக மாற்றியது. இதுமட்டுமின்றி இதற்கு முன்னதாகவும் பல்வேறு புதிய அறிவிப்புகளை காற்று மாசு சார்ந்து அரசு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், 2021-22 பட்ஜெட்டின்போது பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வெளியிட்டிருந்தார்.
15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனம் மற்றும் 20 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனங்கள் கட்டாயம் ஃபிட்னஸ் சான்று பெற வேண்டும் என்பதே இந்த புதிய விதியின் அம்சமாகும். ஃபிட்னஸ் தர ஆய்வில் வாகனம் தேர்ச்சி பெற தவறினால் பல மடங்கு அபராதம் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆகையால், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன்னரே பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் வர்த்தக மற்றும் பழைய வாகன பயன்பாட்டாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இந்த நிலையில் 15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு, மத்திய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், உள்ளூர் அரசு துறைகள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள் என அரசு சார்ந்து இயங்கும் அனைத்து துறைகளுக்குமே பொருந்தும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியிருக்கின்றது.
ஆகையால், இப்புதிய பழைய வாகன அழிப்பு கொள்கையால் அரசு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் 15 வயதுடைய வாகனங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. வரும் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரு இருப்பதாகவும் அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. ஆகையால், 15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்கள் இனி மறு-பதிவு செய்ய முடியா சூழல் உருவாகியிருக்கின்றது.
காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இத்தகைய அதிரடி நடவடிக்கையை அமைச்சகம் எடுத்திருக்கின்றது. இந்தியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பழைய மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதில், போலீஸ் வேன்கள், தபால் வேன்கள், மாநில பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அடங்கும். இவற்றை வெளியேற்றுவன் வாயிலாகவே பெருமளவிலான காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும் என வாகன ஆர்வலர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையிலேயே அனைத்து அரசுத்துறைகளுக்குமே பொருந்துகின்ற வகையில் ஓர் அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய வாகனங்களை வெளியேற்றுவது மட்டுமின்றி மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.