Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்த மாநிலத்தில்தான் பழைய வாகனங்கள் ரொம்ப அதிகமாக இருக்கு... ஷாக் தகவல் வெளியிட்ட மத்திய அமைச்சகம்...
பழைய வாகனங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றைக் காட்டிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களினாலயே அதிகம் சுற்றுச்சூழல் மாசடைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக அதிக வயது கொண்ட வாகனங்களின் இயக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
எனவேதான் பழைய வாகனங்களை முழுமையாக நாட்டின் சாலைகளில் இருந்து அப்புறத்த வேண்டும் என்பதில் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதி-தீவீரம் காட்டி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2021 பட்ஜெட்டின்போது பழைய வாகனங்களை அழிப்பதற்கான திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டது.
இதைனைத் தொடர்ந்து மிக சமீபத்தில் இத்திட்டத்தின் கொள்கை பற்றிய தகவலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகன கணக்கெடுப்பு பணியையும் அரசு மேற்கொண்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணியில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் நான்கு கோடிக்கும் அதிகமான 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் வாகனங்கள் பற்றிய தகவலையும் டிஜிட்டல் மயமாக்கியிருக்கின்றது. இதில், ஆந்திரா, மபி, தெலங்கானா மற்றும் லட்சத்தீவுகள் மட்டும் அடங்காது. டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் நான்கு கோடி 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் தற்போதும் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், இரண்டும் கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய வாகனங்கள் என கூறப்படுகின்றது. அதிகபட்சமாக பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கர்நாடகா மாநிலமே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 70 லட்சத்திற்கும் அதிகமான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், நாட்டின் அதிகம் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இதற்கு அடுத்த இடத்தை உத்தர பிரதேச மாநிலம் பிடித்திருக்கின்றது. அதாவது, 56.54 லட்சம் பழைய வாகனங்கள் இருப்பைக் கொண்டு இரண்டாம் இடத்தை உபி பிடித்துள்ளது. இங்கு, 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் 24.55 லட்சத்திற்கு அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றன.
இதையடுத்து, 49.33 லட்சம் வாகனங்களைக் கொண்டு மூன்றாம் இடத்தை தலைநகர் டெல்லி பிடித்திருக்கின்றது. இங்கு அதிகபட்சமாக 35.11 லட்சம், 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. தொடர்ந்து, 34.64 லட்சம் பழைய வாகனங்களுடன் நான்காவது இடத்தை கேரளாவும், 33.43 லட்சம் பழைய வாகனங்களை இருப்பில் கொண்டு நான்காவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன.
மேலும், 25.38 லட்சம் பழைய வாகனங்களுடன் அடுத்த இடத்தை பஞ்சாப் மாநிலமும், 22.69 லட்சம் பழைய வாகனங்களுடன் மேற்வங்கம் அடுத்த இடத்தையும் பிடித்திருக்கின்றது. மஹாராஷ்டிரா, ஒடிசா, குஜராஜ், ராஜஸ்தான் மற்றும் ஹர்யானா ஆகிய மாநிலங்களில் 12.29 லட்சம் தொடங்கி 17.58 லட்சம் வரையிலான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
மிக மிக குறைந்த எண்ணிக்கையில் பழைய வாகனங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களாக ஜார்காண்ட், உத்தர்காண்ட், சத்திஷ்கர், ஹிமாச்சல், புதுச்சேரி, அசாம், பிஹார், கோவா, திரிபுரா மற்றும் பிற யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் 1 லட்சம் தொடங்கி 5.44 லட்சம் வரையிலான பழைய வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த வாகனங்களையே பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. பழைய வாகன பயன்பாட்டாளர்களே அவற்றை வெறுத்து கைவிட வைக்கும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் பசுமை வரி எனும் புதிய வரியை அறிமுகப்படுத்தியது.
இதுமட்டுமின்றி, மறு பதிவு கட்டணம் உயர்வு, ஆர்சி சான்று கட்டணம் உயர்வு, வரி உயர்வு என பல்வேறு உயர்வுகளை அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், பழைய வாகன பயன்பாட்டாளர்கள் பெருத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். முன்பிருந்ததைக் காட்டிலும் 10 முதல் 25 மடங்கு வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேசமயம், தாமாக முன்வந்து பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை அழித்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது 5 சதவீத தள்ளுபடி, பதிவு கட்டணத்தில் சலுகை மற்றும் பல சலுகைகளை வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கின்றது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!