Just In
- 38 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சொகுசு கார் மோதி இரு போலீஸார் பலி... சென்னையில் அரங்கேறிய கோர சம்பவம்... என்ன நடந்தது?
சொகுசு கார் மோதியதில் இரு காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று மோதியதில் ஆயுதமேந்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இரு கான்ஸ்டபிள்கள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு போலீஸாரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போதே இந்த கோர விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்திற்கு சொகுசு கார் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதி-வேகத்தில் வந்ததே காரணம் என கூறப்படுகின்றது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு காவலர்களும் சம்பவத்தின்போது தலைக் கவசம் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதி வேகத்தில் கார் வந்து மோதியதன் காரணத்தினால் இருவரும் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர். கார்த்திக் (34) மற்றும் ரவீந்திரன் (32) ஆகிய இருவர் காவலர்களே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள்.
இவர்களில் ரவீந்திரன் என்கிற காவலரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கின்றார். பலத்த காயங்களின் காரணமாக விபத்து நடைபெற்ற சம்ப இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். மேலும், கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்திக், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.
இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்த நிலையிலும் உயிரிழந்திருப்பது காவல்துறையில் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடை அடுத்துள்ள முகப்பேர் கிழக்கு பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் இருவரும் பணிக்கு சென்றுக் கொண்டிருந்தபோதே இந்த கோர விபத்து சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
சொகுசு காரை இயக்கி வந்தவர் எஸ். அம்ருத் (25) என கண்டறியப்பட்டுள்ளது. தனது நண்பருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த இவர் மீண்டும் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பியிருக்கின்றார். அதி காலை என்பதால் சற்று கூடுதல் வேகத்தில் காரை ஓட்டியிருக்கின்றார் அம்ருத். அப்போதே போலீஸார் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது காரைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதினார்.
இச்சம்பவம்குறித்து வழக்கு பதிந்த முகப்பேர் போலீஸார் ஐபிசி பிரிவு 304 (ii)ன் கீழ் வழக்கு பதிந்திருக்கின்றனர். தொடர்ந்து, காரை ஓட்டியவர் மற்றும் காருக்குள் பயணித்தவர்கள் சிலரை சிறை பிடித்திருக்கின்றனர். சம்பவத்தின்போது இளைஞர் அம்ருத் மது அருந்தவில்லை என்பதை ஆய்வின்மூலம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.
ஆகையால், இவ்விபத்திற்கு மது போதை காரணமில்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம், அளவிடப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் காரை இயக்கியதே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். எனவேதான் போலீஸார் தலைக் கவசம் அணிந்திருந்தும் கடுமையான காயங்களை அடைந்து, உயிரிழந்திருக்கின்றனர்.
இதுபோன்ற காரணத்தினாலயே அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. ஆனால், இதனை வாகன ஓட்டிகள் துளியளவும் கடைப்பிடிப்பதில்லை. மேலும், இந்த மாதமானது, தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஆகும். இந்த மாதத்தில் இம்மாதிரியான கோர விபத்து நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பணிக்குச் சென்றுக் கொண்டிருந்த போலீஸார் இறந்திருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதே இந்த 'தேசிய சாலை பாதுகாப்பு மாதம்' ஆகும். இந்த பிரசாரத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வுகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!