Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொகுசு கார் மோதி இரு போலீஸார் பலி... சென்னையில் அரங்கேறிய கோர சம்பவம்... என்ன நடந்தது?
சொகுசு கார் மோதியதில் இரு காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று மோதியதில் ஆயுதமேந்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இரு கான்ஸ்டபிள்கள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு போலீஸாரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போதே இந்த கோர விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்திற்கு சொகுசு கார் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதி-வேகத்தில் வந்ததே காரணம் என கூறப்படுகின்றது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு காவலர்களும் சம்பவத்தின்போது தலைக் கவசம் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதி வேகத்தில் கார் வந்து மோதியதன் காரணத்தினால் இருவரும் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர். கார்த்திக் (34) மற்றும் ரவீந்திரன் (32) ஆகிய இருவர் காவலர்களே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள்.
இவர்களில் ரவீந்திரன் என்கிற காவலரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கின்றார். பலத்த காயங்களின் காரணமாக விபத்து நடைபெற்ற சம்ப இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். மேலும், கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்திக், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.
இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்த நிலையிலும் உயிரிழந்திருப்பது காவல்துறையில் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடை அடுத்துள்ள முகப்பேர் கிழக்கு பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் இருவரும் பணிக்கு சென்றுக் கொண்டிருந்தபோதே இந்த கோர விபத்து சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
சொகுசு காரை இயக்கி வந்தவர் எஸ். அம்ருத் (25) என கண்டறியப்பட்டுள்ளது. தனது நண்பருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த இவர் மீண்டும் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பியிருக்கின்றார். அதி காலை என்பதால் சற்று கூடுதல் வேகத்தில் காரை ஓட்டியிருக்கின்றார் அம்ருத். அப்போதே போலீஸார் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது காரைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதினார்.
இச்சம்பவம்குறித்து வழக்கு பதிந்த முகப்பேர் போலீஸார் ஐபிசி பிரிவு 304 (ii)ன் கீழ் வழக்கு பதிந்திருக்கின்றனர். தொடர்ந்து, காரை ஓட்டியவர் மற்றும் காருக்குள் பயணித்தவர்கள் சிலரை சிறை பிடித்திருக்கின்றனர். சம்பவத்தின்போது இளைஞர் அம்ருத் மது அருந்தவில்லை என்பதை ஆய்வின்மூலம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.
ஆகையால், இவ்விபத்திற்கு மது போதை காரணமில்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம், அளவிடப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் காரை இயக்கியதே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். எனவேதான் போலீஸார் தலைக் கவசம் அணிந்திருந்தும் கடுமையான காயங்களை அடைந்து, உயிரிழந்திருக்கின்றனர்.
இதுபோன்ற காரணத்தினாலயே அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. ஆனால், இதனை வாகன ஓட்டிகள் துளியளவும் கடைப்பிடிப்பதில்லை. மேலும், இந்த மாதமானது, தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஆகும். இந்த மாதத்தில் இம்மாதிரியான கோர விபத்து நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பணிக்குச் சென்றுக் கொண்டிருந்த போலீஸார் இறந்திருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதே இந்த 'தேசிய சாலை பாதுகாப்பு மாதம்' ஆகும். இந்த பிரசாரத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வுகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.